• Download mobile app
30 May 2026, SaturdayEdition - 3762
FLASH NEWS
  • எங்களை நீக்குவதற்கு இபிஎஸ்க்கு அதிகாரம் இல்லை.. – சி. வி.சண்முகம்
  • எஸ்.பி.வேலுமணி, சி.வி.சண்முகம் உள்ளிட்ட MLA-க்கள் பதவி பறிப்பு
  • ”நீட் தேர்வை முழுமையாக ரத்து செய்ய வேண்டும்”- முதல்வர் விஜய்
  • “மாணவர்கள் நடத்திய மொழிப்போரில் ஸ்டிக்கர் ஒட்டிக்கொண்டது திமுக”- பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ்
  • பிரவீன் சக்ரவர்த்தியின் கருத்து காங்கிரஸ் தலைமையின் கருத்து கிடையாது – கார்த்தி சிதம்பரம்
  • “ஜெயலலிதா அவர்களே என் ரோல் மாடல்” -பிரேமலதா விஜயகாந்த் பேட்டி
  • ராகுல் காந்தி கைது – தவெக தலைவர் விஜய் கண்டனம்
  • செத்து சாம்பல் ஆனாலும் தனித்துதான் போட்டி – சீமான்
  • பாகிஸ்தானின் அணு ஆயுத மிரட்டலுக்கு அஞ்சமாட்டோம் – இந்தியா
  • மத்திய ஆசிரியர் தகுதித் தேர்வு: பட்டதாரிகள் அக்.16 வரை விண்ணப்பிக்கலாம்

மனநலம் பாதித்த பெண்ணை மீட்டு அரசு மருத்துவமனையில் சேர்த்த ஈர நெஞ்சம்

March 10, 2017 தண்டோரா குழு

கோவை சத்தி சாலையில் மனநிலை பாதித்த நிலையில் காணப்பட்ட பெண்ணை மீட்ட ‘ஈர நெஞ்சம்’ அறக்கட்டளை அவரை கோவை அரசு மருத்துவமனையில் சேர்த்துள்ளது.

கோவை சத்தி சாலை விளாங்குறிச்சி பகுதியில் 35 வயது மதிக்கத்தக்க ஒரு பெண் ஆடை கிழிந்த நிலையில் வெள்ளியன்று காலையில் நடந்து சென்று கொண்டிருந்தார். அதைப் பார்த்த இந்திய பப்ளிக் பள்ளியைச் சேர்ந்த மாணவர்கள் மாநகராட்சி அதிகாரிகளுக்குத் தகவல் தெரிவித்தனர். மாநகராட்சி அதிகாரிகள் மூலம் ‘ஈர நெஞ்சம்’ அறக்கட்டளைக்குத் தகவல் கிடைத்துள்ளது.

அதையடுத்து, அங்கு சென்ற ‘ஈர நெஞ்சம்’ நிறுவனர் மகேந்திரன் நண்பர்களின் உதவியுடன் அப்பெண்னை மீட்டு, கோவை அரசு மருத்துவமனையில் சேர்த்துள்ளார்.இது குறித்து மகேந்திரன் கூறும்போது, “மனநலம் பாதிக்கப்பட்ட நிலையில் இருந்த அப்பெண் வடமாநிலத்தை சேர்ந்தவர். அவரது பெயரைக் கூட அவரால் சொல்ல முடியாமல் இந்தியில் பேசி வருகிறார். இப்போதைக்கு அவருக்குச் சிகிச்சை தேவைப்பட்டதால், அவரை மீட்டு நாங்கள் கோவை அரசு மருத்துவமனையில் சேர்த்துள்ளோம். அவர் குணமடைந்தால் எங்கள் அறக்கட்டளையில் அவரைச் சேர்த்து பாராமரிப்போம்” என்றார்.

மேலும் படிக்க