• Download mobile app
17 May 2024, FridayEdition - 3019
FLASH NEWS
  • பீகார் முன்னாள் துணை முதலமைச்சர் சுஷில் குமார் மோடி காலமானார்!
  • தமிழ்நாட்டில் +1 பொதுத்தேர்வு முடிவுகள் வெளியானது.. 91.17% பேர் தேர்ச்சி..!
  • வள்ளுவரைப் பற்றிய அடிப்படை புரிதல் ஆளுநருக்கு இல்லை: கனிமொழி
  • தெலங்கானா முதலமைச்சராக பதவியேற்றார் ரேவந்த் ரெட்டி;
  • தமிழகத்தில் இயல்பை விட இந்த ஆண்டு, வடகிழக்கு பருவமழை குறைவு –
  • மிக்ஜாம் புயல்: தமிழ்நாட்டுக்கு ரூ.450 கோடி நிதி ஒதுக்கீடு!
  • மத்தியில் ஆட்சிக்கு வந்ததும் சாதிவாரி கணக்கெடுப்பை நடத்துவோம்-ராகுல் காந்தி

மனநலம் பாதித்த பெண்ணை மீட்டு அரசு மருத்துவமனையில் சேர்த்த ஈர நெஞ்சம்

March 10, 2017 தண்டோரா குழு

கோவை சத்தி சாலையில் மனநிலை பாதித்த நிலையில் காணப்பட்ட பெண்ணை மீட்ட ‘ஈர நெஞ்சம்’ அறக்கட்டளை அவரை கோவை அரசு மருத்துவமனையில் சேர்த்துள்ளது.

கோவை சத்தி சாலை விளாங்குறிச்சி பகுதியில் 35 வயது மதிக்கத்தக்க ஒரு பெண் ஆடை கிழிந்த நிலையில் வெள்ளியன்று காலையில் நடந்து சென்று கொண்டிருந்தார். அதைப் பார்த்த இந்திய பப்ளிக் பள்ளியைச் சேர்ந்த மாணவர்கள் மாநகராட்சி அதிகாரிகளுக்குத் தகவல் தெரிவித்தனர். மாநகராட்சி அதிகாரிகள் மூலம் ‘ஈர நெஞ்சம்’ அறக்கட்டளைக்குத் தகவல் கிடைத்துள்ளது.

அதையடுத்து, அங்கு சென்ற ‘ஈர நெஞ்சம்’ நிறுவனர் மகேந்திரன் நண்பர்களின் உதவியுடன் அப்பெண்னை மீட்டு, கோவை அரசு மருத்துவமனையில் சேர்த்துள்ளார்.இது குறித்து மகேந்திரன் கூறும்போது, “மனநலம் பாதிக்கப்பட்ட நிலையில் இருந்த அப்பெண் வடமாநிலத்தை சேர்ந்தவர். அவரது பெயரைக் கூட அவரால் சொல்ல முடியாமல் இந்தியில் பேசி வருகிறார். இப்போதைக்கு அவருக்குச் சிகிச்சை தேவைப்பட்டதால், அவரை மீட்டு நாங்கள் கோவை அரசு மருத்துவமனையில் சேர்த்துள்ளோம். அவர் குணமடைந்தால் எங்கள் அறக்கட்டளையில் அவரைச் சேர்த்து பாராமரிப்போம்” என்றார்.

மேலும் படிக்க