• Download mobile app
18 May 2024, SaturdayEdition - 3020
FLASH NEWS
  • பீகார் முன்னாள் துணை முதலமைச்சர் சுஷில் குமார் மோடி காலமானார்!
  • தமிழ்நாட்டில் +1 பொதுத்தேர்வு முடிவுகள் வெளியானது.. 91.17% பேர் தேர்ச்சி..!
  • வள்ளுவரைப் பற்றிய அடிப்படை புரிதல் ஆளுநருக்கு இல்லை: கனிமொழி
  • தெலங்கானா முதலமைச்சராக பதவியேற்றார் ரேவந்த் ரெட்டி;
  • தமிழகத்தில் இயல்பை விட இந்த ஆண்டு, வடகிழக்கு பருவமழை குறைவு –
  • மிக்ஜாம் புயல்: தமிழ்நாட்டுக்கு ரூ.450 கோடி நிதி ஒதுக்கீடு!
  • மத்தியில் ஆட்சிக்கு வந்ததும் சாதிவாரி கணக்கெடுப்பை நடத்துவோம்-ராகுல் காந்தி

ஹோலி கொண்டாட்டத்தில் விதவைகள்

March 9, 2017 தண்டோரா குழு

வாராணசியில் நடைபெற்ற ஹோலி கொண்டாட்டத்தில் விதவைகளுக்கு விதிக்கப்பட்ட கட்டுப்பாடுகளைத் தூக்கி எறிந்துவிட்டு கலந்துக்கொண்டனர்.

வாராணசியில் உள்ள 400 ஆண்டுகள் பழைமையான கோபிநாத் கோவில் வளாகத்தில் நடந்த ஹோலி கொண்டாட்டத்தில் வாராணசி மற்றும் விரிந்தாவன் ஆகிய இடங்களிலிருந்து விதவைகள் வந்து இந்த கொண்டாட்டத்தில் மகிழ்ச்சியுடன் கலந்துகொண்டனர்.

பிரிந்தாவனின் கோபிநாத் பஜாரில் உள்ள பழமையான கிருஷ்ணர் கோவிலில், வெள்ளை உடை அணிந்த விதவைகள் வந்து வண்ண நிறங்களை ஒருவர் மீது ஒருவர் வீசி மகிழ்ந்தனர்.

வாராணசியில் உள்ள ‘சுலப் சர்வதேசம்’ என்னும் தன்னார்வத் தொண்டு நிறுவனத்தின் தலைவர் சமூக ஆர்வலரான பிந்தேஸ்வர் பாடக் ஏற்பாடு செய்த நிகழ்ச்சியில்தான் விதவைகள் உற்சாகத்துடன் கலந்துகொண்டனர்.

“விதவைகள் வண்ண ஆடைகள் அணிவதற்குத் தடை பரம்பரை பரம்பரையாக இருந்தது. ஆனால், அதை உடைத்து வெளியே வருகிறார்கள் என்பதைக் குறிப்பது தான் அவர்கள் ஹோலி கொண்டாட்டத்தில் பங்கேற்பதற்கு அடையாளம்” என்றார் பாடக்.

தன்னார்வத் தொண்டு நிறுவனம் வெளியிட்ட அறிக்கையில், “1,5௦௦ கிலோகிராம் வண்ண நிறப் பொடிகளும், 1,5௦௦ கிலோ கிராம் பூக்களின் இதழ்கள் இந்த கொண்டாட்டத்திற்கு ஏற்பாடு செய்யப்பட்டது. வாராணசி மற்றும் பிரிந்தாவனில் உள்ள 8 ஆசிரமங்களில் வசிக்கும் 8௦௦ விதவைகளுக்கு 2௦௦௦ ரூபாய் வழங்கப்படுகிறது” என்று தெரிவித்தது.

மேலும் படிக்க