தேர்தல் ஆணையம் அடுத்த மாதம் நடைபெற உள்ள சட்டமன்ற தேர்தலில் நூறு சதவிகித வாக்குப்பதிவு என்பதைத் தாரக மந்திரமாகக் கொண்டுள்ளது. இதற்காக பல்வேறு முயற்சிகளை மேற்கொண்டு வரும் தேர்தல் ஆணையம் தற்போது புத்தாண்டு கொண்டாட்டம் என்பதால் அதற்குத் தகுந்தாற்போல் ஒரு விளம்பரத்தை வெளியிட்டு உள்ளது. அதில் புத்தாண்டு பலன் எனப் போட்டு அனைத்து ராசிகளுக்கும் வரும் தமிழ் ஆண்டு உங்களுக்கு நல்ல ஆண்டாக இருக்கும். ஆனால் அடுத்த 5 ஆண்டுகளும் நல்ல ஆண்டாக இருக்க மே 16 அன்று நடக்கும் தேர்தலில் கட்டாயம் வாக்குப் பதிவு செய்ய வேண்டும் என அச்சிட்டுள்ளனர். இதைப் படிக்கு அனைவரும் கட்டாயம் மே 16 என்ற தேதியை நினைவில் நிறுத்திக்கொள்வார்கள் என்பதில் சந்தேகமே இல்லை. சமீபமாகச் சுப நிகழ்ச்சி பத்திரிகை போல் அச்சடித்து மக்களுக்கு அழைப்பு கொடுத்து தேர்தல் ஆணையம் ஆச்சரியப் படுத்தியது. தற்போது ராசி பலன் வடிவில் வாக்குப்பதிவை வலியுறுத்தியது மக்களைக் கவரும் விதமாக உள்ளது.
வரும் 16ம் தேதி கோவை மாவட்ட காவல்துறையின் வாகன பொது ஏலம் நடைபெறுகிறது
கோவை மாவட்டத்தில் நடைபெற்ற மக்கள் குறைதீர்க்கும் முகாமில் 26 மனுக்கள் மீது சுமூகமான முறையில் தீர்வு
காஞ்சி மகாபெரியவரின் 131 ஆவது ஜெயந்தி தினத்தை முன்னிட்டு ஹோமம், பாராயணம் நிகழ்ச்சி
பிஎஸ்ஹெச் ஹோம் அப்ளையன்சஸ்ஸின் முதல் சீமென்ஸ் பிராண்ட் ஸ்டோர் கோவையில் திறப்பு
கேரளாவில் இருந்து மருத்துவக் கழிவுகள் கொண்டுவரப்பட்டதாகப் பரவும் பொய்யான தகவல்
இரவு ரோந்து பணியில் கோவை மாவட்ட காவலர்களின் விழிப்புணர்வு:கையும் களவுமாக பிடிபட்ட திருடர்கள் – மாவட்ட எஸ்.பி பாராட்டு