• Download mobile app
10 May 2025, SaturdayEdition - 3377
FLASH NEWS
  • அமைச்சர் உதயநிதி துணை முதல்வராவதற்கு காத்திருக்கிறேன் – சபாநாயகர் அப்பாவு
  • தமிழ்நாட்டில் 11 இடங்களில் 100 டிகிரி ஃபாரன்ஹீட்க்கு மேல் வெயில் பதிவு!
  • “சந்திரபாபு நாயுடு கூறும் அனைத்துமே கட்டுக்கதைகள்” – ஜெகன் மோகன் ரெட்டி
  • மத்திய ஆசிரியர் தகுதித் தேர்வு: பட்டதாரிகள் அக்.16 வரை விண்ணப்பிக்கலாம்
  • பீகார் முன்னாள் துணை முதலமைச்சர் சுஷில் குமார் மோடி காலமானார்!
  • தமிழ்நாட்டில் +1 பொதுத்தேர்வு முடிவுகள் வெளியானது.. 91.17% பேர் தேர்ச்சி..!
  • வள்ளுவரைப் பற்றிய அடிப்படை புரிதல் ஆளுநருக்கு இல்லை: கனிமொழி
  • தெலங்கானா முதலமைச்சராக பதவியேற்றார் ரேவந்த் ரெட்டி;
  • தமிழகத்தில் இயல்பை விட இந்த ஆண்டு, வடகிழக்கு பருவமழை குறைவு –
  • மிக்ஜாம் புயல்: தமிழ்நாட்டுக்கு ரூ.450 கோடி நிதி ஒதுக்கீடு!
  • மத்தியில் ஆட்சிக்கு வந்ததும் சாதிவாரி கணக்கெடுப்பை நடத்துவோம்-ராகுல் காந்தி

பாவனாவுக்கு நீதி கிடைக்கும் வரை உண்ணாவிரதம்- மஞ்சு அறிவிப்பு

February 24, 2017 தண்டோரா குழு

மலையாள நடிகை பாவனாவுக்கு நேர்ந்த சம்பவத்திற்கு நீதி கிடைக்க உண்ணாவிரதம் இருக்கப் போவதாக நடிகை மஞ்சு வாரியார் அறிவித்துள்ளார்.

பிரபல மலையாள நடிகை பாவனா சமீபத்தில் கொச்சியிலிருந்து படப்பிடிப்பு முடிந்து வரும் வழியில் காரில் கடத்தப்பட்டு பாலியல் துன்புறுத்தலுக்கு ஆளானார். அவருக்கு ஆதரவாக மலையாளத் திரையுலகமே ஒருங்கிணைந்து தங்களது எதிர்ப்பை தெரிவித்து வருகின்றனர்.

இந்நிலையில், மலையாள முன்னணி நடிகையும் பாதிக்கப்பட்ட பாவனாவின் நெருங்கிய தோழியுமான நடிகை மஞ்சு வாரியார் கேரள தலைமைச் செயலகம் முன்பு உண்ணாவிரதம் இருக்க தீர்மானித்துள்ளதாகக் கூறப்படுகிறது. இந்தத் தகவலை மஞ்சு வாரியார் கூறாவிட்டாலும் அவரது நட்பு வட்டாரம் தெரிவித்துள்ளது.

எனினும், தற்போது இந்த கொடூர சம்பவத்தில் ஈடுபட்ட பல்சர் சுனில் உட்பட அனைவரும் கைது செய்யப்பட்டு போலீஸ் காவலில் உள்ளனர். இவர்களுக்குப் பின்னால் யாரோ இருக்கின்றனர் என்று பாவனாவுக்கு நெருக்கமானவர்கள் சந்தேகப்படுகிறார்கள்.

மேலும் படிக்க