• Download mobile app
03 Jun 2026, WednesdayEdition - 3766
FLASH NEWS
  • எங்களை நீக்குவதற்கு இபிஎஸ்க்கு அதிகாரம் இல்லை.. – சி. வி.சண்முகம்
  • எஸ்.பி.வேலுமணி, சி.வி.சண்முகம் உள்ளிட்ட MLA-க்கள் பதவி பறிப்பு
  • ”நீட் தேர்வை முழுமையாக ரத்து செய்ய வேண்டும்”- முதல்வர் விஜய்
  • “மாணவர்கள் நடத்திய மொழிப்போரில் ஸ்டிக்கர் ஒட்டிக்கொண்டது திமுக”- பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ்
  • பிரவீன் சக்ரவர்த்தியின் கருத்து காங்கிரஸ் தலைமையின் கருத்து கிடையாது – கார்த்தி சிதம்பரம்
  • “ஜெயலலிதா அவர்களே என் ரோல் மாடல்” -பிரேமலதா விஜயகாந்த் பேட்டி
  • ராகுல் காந்தி கைது – தவெக தலைவர் விஜய் கண்டனம்
  • செத்து சாம்பல் ஆனாலும் தனித்துதான் போட்டி – சீமான்
  • பாகிஸ்தானின் அணு ஆயுத மிரட்டலுக்கு அஞ்சமாட்டோம் – இந்தியா
  • மத்திய ஆசிரியர் தகுதித் தேர்வு: பட்டதாரிகள் அக்.16 வரை விண்ணப்பிக்கலாம்

பணிக்கொடையை வழங்க கோரி ஊழியர்கள் ஆர்ப்பாட்டம்

February 21, 2017 தண்டோரா குழு

முப்பது ஆண்டுகளாகப் பணிக்கொடை (Gratuity) வழங்காத தனியார் நிறுவனத்தைக் கண்டித்து அந்நிறுவனத்தில் பணியாற்றிய முன்னாள் ஊழியர்கள் கோவை தெற்கு வட்டாசியர் அலுவலகம் முன்பு ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

கோவையில் செயல்பட்டு வந்த “நவ இந்தியா” நிறுவனம், நிர்வாகக் குறைபாடு காரணமாகச் சில வருடங்களுக்கு மூடப்பட்டது. அந்த நிறுவனத்தில் பணியாற்றிய ஊழியர்களுக்கு இதுவரை வழங்க வேண்டிய பணிக்கொடை வழங்கப்படவில்லை என ஊழியர்கள் தொடர்ந்து போராடி வலியுறுத்தி வந்தனர்.

இதன் காரணமாக சில ஆண்டுகளுக்கு முன் ஊழியர்களுக்கு 50 சதவீதம் பணிக்கொடை வழங்கப்பட்டது. அதன் பிறகு வழங்க வேண்டிய மீதித் தொகையை நிர்வாகம் இதுவரை வழங்கவில்லை.

ஊழியர்களுக்கு வழங்க வேண்டிய மீதித் தொகையை வழங்காமல் நிறுவனம் காலம் தாழ்த்துவதைக் கண்டித்து அங்கு பணியாற்றிய ஊழியர்கள் கோவை தெற்கு வட்டாட்சியர் அலுவலகம் முன்பு செவ்வாய்க்கிழமை ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

“நவ இந்தியா நிறுவனத்தில் பணியாற்றிய 180 ஊழியர்களுக்கு இதுவரை முழுமையான பணிக்கொடை வழங்கவில்லை. அதில், சில ஊழியர்கள் தற்போது இறந்துவிட்டனர். எனவே, அவர்களுக்குத் தரவேண்டிய தொகையை அவர்களது குடும்பத்தாருக்கு வழங்க வேண்டும்.

“நவ இந்தியா” நிறுவனம் கோரிக்கைகளை உடனடியாக ஏற்று விரைந்து நடவடிக்கை எடுக்கவேண்டும். இல்லையென்றால் அடுத்த கட்டமாக மாவட்ட ஆட்சியரைச் சந்திக்க இருக்கிறோம்” என்று ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டோர் கோஷமிட்டனர்.

மேலும் படிக்க