• Download mobile app
03 Jul 2025, ThursdayEdition - 3431
FLASH NEWS
  • அமைச்சர் உதயநிதி துணை முதல்வராவதற்கு காத்திருக்கிறேன் – சபாநாயகர் அப்பாவு
  • தமிழ்நாட்டில் 11 இடங்களில் 100 டிகிரி ஃபாரன்ஹீட்க்கு மேல் வெயில் பதிவு!
  • “சந்திரபாபு நாயுடு கூறும் அனைத்துமே கட்டுக்கதைகள்” – ஜெகன் மோகன் ரெட்டி
  • மத்திய ஆசிரியர் தகுதித் தேர்வு: பட்டதாரிகள் அக்.16 வரை விண்ணப்பிக்கலாம்
  • பீகார் முன்னாள் துணை முதலமைச்சர் சுஷில் குமார் மோடி காலமானார்!
  • தமிழ்நாட்டில் +1 பொதுத்தேர்வு முடிவுகள் வெளியானது.. 91.17% பேர் தேர்ச்சி..!
  • வள்ளுவரைப் பற்றிய அடிப்படை புரிதல் ஆளுநருக்கு இல்லை: கனிமொழி
  • தெலங்கானா முதலமைச்சராக பதவியேற்றார் ரேவந்த் ரெட்டி;
  • தமிழகத்தில் இயல்பை விட இந்த ஆண்டு, வடகிழக்கு பருவமழை குறைவு –
  • மிக்ஜாம் புயல்: தமிழ்நாட்டுக்கு ரூ.450 கோடி நிதி ஒதுக்கீடு!
  • மத்தியில் ஆட்சிக்கு வந்ததும் சாதிவாரி கணக்கெடுப்பை நடத்துவோம்-ராகுல் காந்தி

எங்கள் ஆதரவு அரசியல் சட்டத்துக்கே – திருநாவுக்கரசர்

February 13, 2017 தண்டோரா குழு

“எங்கள் ஆதரவு பன்னீர்செல்வத்துக்கும் இல்லை, சசிகலாவுக்கும் இல்லை அரசியல் சட்டத்துக்கே” என்று தமிழக காங்கிரஸ் கட்சி தலைவர் திருநாவுக்கரசர் கூறியுள்ளார்.

சென்னை விமான நிலையத்தில் செய்தியாளர்களிடம் திங்கட்கிழமை அவர் பேசியதாவது:

“அ.தி.மு.க. பொதுச்செயலாளர் வி.கே. சசிகலாவை ஆட்சி அமைக்க அழைக்குமாறு தமிழக பொறுப்பு ஆளுநர் வித்யாசாகர் ராவை காங்கிரஸ் கட்சி வலியுறுத்துவதால், நாங்கள் சசிகலாவுக்கு ஆதரவு தெரிவிப்பதாகச் செய்திகள் வெளியாகின்றன.

உண்மையில் எங்கள் ஆதரவு பன்னீர்செல்வத்துக்கும் இல்லை, சசிகலாவுக்கும் இல்லை அரசியல் சட்டத்துக்கே எங்கள் ஆதரவு. இந்திய அரசியல் சாசன சட்டப்படி ஆளுநர் செயல்பட வேண்டும் என்றுதான் நாங்கள் வலியுறுத்தி வருகிறோம்.

ஒ. பன்னீர்செல்வம் அல்லது வி.கே. சசிகலா யாராவது ஒருவரை அழைத்து ஆட்சி அமைக்க அனுமதித்து, அவர்களைச் சட்டப் பேரவையில் பெரும்பான்மையை நிரூபிக்க வைக்க வேண்டும் என்றுதான் வலியுறுத்துகிறோம்.

சட்டப் பேரவை உறுப்பினர்கள் ஆதரவுக் கடிதம் கொடுத்தவருக்குப் பதவிப் பிரமாணம் செய்து வைக்க வேண்டும். அவரது பெரும்பான்மையில் சந்தேகம் இருந்தால், சட்டப் பேரவையில் பெரும்பான்மையை நிரூபிக்க வாக்கெடுப்பு நடத்துவதற்கு ஆளுநர் சொல்ல வேண்டும். காலதாமதம் செய்யக் கூடாது என்பதே எங்கள் கருத்து”

இவ்வாறு திருநாவுக்கரசர் கூறினார்.

மேலும் படிக்க