• Download mobile app
15 Apr 2026, WednesdayEdition - 3717
FLASH NEWS
  • “மாணவர்கள் நடத்திய மொழிப்போரில் ஸ்டிக்கர் ஒட்டிக்கொண்டது திமுக”- பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ்
  • பிரவீன் சக்ரவர்த்தியின் கருத்து காங்கிரஸ் தலைமையின் கருத்து கிடையாது – கார்த்தி சிதம்பரம்
  • ராகுல்காந்தியின் போராட்டத்திற்கு தோள் நிற்போம் – முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்
  • “ஜெயலலிதா அவர்களே என் ரோல் மாடல்” -பிரேமலதா விஜயகாந்த் பேட்டி
  • ராகுல் காந்தி கைது – தவெக தலைவர் விஜய் கண்டனம்
  • செத்து சாம்பல் ஆனாலும் தனித்துதான் போட்டி – சீமான்
  • பாகிஸ்தானின் அணு ஆயுத மிரட்டலுக்கு அஞ்சமாட்டோம் – இந்தியா
  • மத்திய ஆசிரியர் தகுதித் தேர்வு: பட்டதாரிகள் அக்.16 வரை விண்ணப்பிக்கலாம்

எங்கள் ஆதரவு அரசியல் சட்டத்துக்கே – திருநாவுக்கரசர்

February 13, 2017 தண்டோரா குழு

“எங்கள் ஆதரவு பன்னீர்செல்வத்துக்கும் இல்லை, சசிகலாவுக்கும் இல்லை அரசியல் சட்டத்துக்கே” என்று தமிழக காங்கிரஸ் கட்சி தலைவர் திருநாவுக்கரசர் கூறியுள்ளார்.

சென்னை விமான நிலையத்தில் செய்தியாளர்களிடம் திங்கட்கிழமை அவர் பேசியதாவது:

“அ.தி.மு.க. பொதுச்செயலாளர் வி.கே. சசிகலாவை ஆட்சி அமைக்க அழைக்குமாறு தமிழக பொறுப்பு ஆளுநர் வித்யாசாகர் ராவை காங்கிரஸ் கட்சி வலியுறுத்துவதால், நாங்கள் சசிகலாவுக்கு ஆதரவு தெரிவிப்பதாகச் செய்திகள் வெளியாகின்றன.

உண்மையில் எங்கள் ஆதரவு பன்னீர்செல்வத்துக்கும் இல்லை, சசிகலாவுக்கும் இல்லை அரசியல் சட்டத்துக்கே எங்கள் ஆதரவு. இந்திய அரசியல் சாசன சட்டப்படி ஆளுநர் செயல்பட வேண்டும் என்றுதான் நாங்கள் வலியுறுத்தி வருகிறோம்.

ஒ. பன்னீர்செல்வம் அல்லது வி.கே. சசிகலா யாராவது ஒருவரை அழைத்து ஆட்சி அமைக்க அனுமதித்து, அவர்களைச் சட்டப் பேரவையில் பெரும்பான்மையை நிரூபிக்க வைக்க வேண்டும் என்றுதான் வலியுறுத்துகிறோம்.

சட்டப் பேரவை உறுப்பினர்கள் ஆதரவுக் கடிதம் கொடுத்தவருக்குப் பதவிப் பிரமாணம் செய்து வைக்க வேண்டும். அவரது பெரும்பான்மையில் சந்தேகம் இருந்தால், சட்டப் பேரவையில் பெரும்பான்மையை நிரூபிக்க வாக்கெடுப்பு நடத்துவதற்கு ஆளுநர் சொல்ல வேண்டும். காலதாமதம் செய்யக் கூடாது என்பதே எங்கள் கருத்து”

இவ்வாறு திருநாவுக்கரசர் கூறினார்.

மேலும் படிக்க