March 20, 2026
தண்டோரா குழு
கோவை செல்வபுரம் பகுதி 79வது வடக்கழகம் திமுக செயலாளராக உள்ள எம். எச் இப்ராஹீம் புகைப்படத்துடன் கட்சியில் பணிபுரியும் சில பெண்களின் புகைபடத்தை இணைத்து ஆபாசமாக சித்தரித்து புகைப்படம் வெளியிட்டு இரண்டு நாட்களாக சமூக வலைதளங்களில் பரவி வருகிறது.
இதனை தொடர்ந்து திமுக 79வது வட்டக் கழகச் செயலாளர் எம்.எச் இப்ராஹிம் கோவை மாநகர காவல் ஆணையத்தில் இன்று புகார் மனு அளித்துள்ளார்.
இது குறித்து அவர் செய்தியாளரிடம் பேசுகையில்,
கடந்த இரண்டு நாட்களாக சமூக வலைதளங்களில் எனது கட்சியில் பணியாற்றி வரும் சில பெண்களின் புகைப்படத்தை என்னுடன் இணைத்து ஆபாசமாக சித்தரித்துள்ளனர். தேர்தல் வரும் நேரங்களில் எனது பெயருக்கு அவதுறு ஏபேடும் வகையில் கட்சியில் களங்கப்படுத்தும் நோக்கில் ஒரு சிலர் இதுபோன்று செயல்களில் ஈடுபட்டு வருகின்றனர்.
ஏ.ஐ, ஜெமினி போன்ற பல்வேறு தொழில்நுட்பங்களின் மூலம் இந்த நாசவேலை செய்து வருகின்றனர். இதனால் நான் மிகுந்த மன உளைச்சலுக்கு ஆளாகி உள்ளேன். இதனை செய்தது யார் என்பதை காவல்துறையினர் கண்டறிந்து தகுந்த நடவடிக்கை எடுக்க வேண்டும் என காவல் ஆணையரிடம் மனு அளித்துள்ளதாக அவர் தெரிவித்தார்.