• Download mobile app
02 Jun 2026, TuesdayEdition - 3765
FLASH NEWS
  • எங்களை நீக்குவதற்கு இபிஎஸ்க்கு அதிகாரம் இல்லை.. – சி. வி.சண்முகம்
  • எஸ்.பி.வேலுமணி, சி.வி.சண்முகம் உள்ளிட்ட MLA-க்கள் பதவி பறிப்பு
  • ”நீட் தேர்வை முழுமையாக ரத்து செய்ய வேண்டும்”- முதல்வர் விஜய்
  • “மாணவர்கள் நடத்திய மொழிப்போரில் ஸ்டிக்கர் ஒட்டிக்கொண்டது திமுக”- பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ்
  • பிரவீன் சக்ரவர்த்தியின் கருத்து காங்கிரஸ் தலைமையின் கருத்து கிடையாது – கார்த்தி சிதம்பரம்
  • “ஜெயலலிதா அவர்களே என் ரோல் மாடல்” -பிரேமலதா விஜயகாந்த் பேட்டி
  • ராகுல் காந்தி கைது – தவெக தலைவர் விஜய் கண்டனம்
  • செத்து சாம்பல் ஆனாலும் தனித்துதான் போட்டி – சீமான்
  • பாகிஸ்தானின் அணு ஆயுத மிரட்டலுக்கு அஞ்சமாட்டோம் – இந்தியா
  • மத்திய ஆசிரியர் தகுதித் தேர்வு: பட்டதாரிகள் அக்.16 வரை விண்ணப்பிக்கலாம்

பி.எஸ்.ஜி மருத்துவ அறிவியல் மற்றும் ஆராய்ச்சி நிறுவனத்தின் நிறுவனர் தினவிழா – 4 முன்னாள் மாணவர்களுக்கு விருது

September 30, 2025 தண்டோரா குழு

பி.எஸ்.ஜி மருத்துவக்கல்லூரி மற்றும் ஆராய்ச்சி நிறுவனத்தின் நிறுவனர் நாள் பி. எஸ்.ஜி மருத்துவக்கல்லூரி கலையரங்கத்தில் நடைபெற்றது.பி.எஸ்.ஜி மருத்துவக்கல்லூரி மற்றும் ஆராய்ச்சி நிறுவனத்தின் முதல்வர் டாக்டர். டி.எம்.சுப்பாராவ் அனைவரையும் வரவேற்றார்.

பி.எஸ்.ஜி அறக்கட்டளையின் நிர்வாக அறங்காவலர் எல்.கோபாலகிருஷ்ணன் தலைமையுரை ஆற்றினார்.விழாவில் சிறப்பு விருந்தினராக பத்மஸ்ரீ விருது பெற்ற டாக்டர் பிலிப் ஆகஸ்டின் கலந்து கொண்டு சிறப்புரையாற்றினார்.பி.எஸ்.ஜி மருத்துவக்கல்லூரிக்கு உலகப்புகழைப் பெற்றுத்தந்த 4 சிறந்த முன்னாள் மாணவர்கள் கவுரவிக்கப்பட்டனர்.

இதில் முன்னாள் மாணவர்களான லண்டன் யுனிவர்சிட்டி ஹாஸ்பிட்டல் ஆஃப் பிளைமத்-ல் குடல்வாய் அறுவைசிகிச்சை நிபுணர் டாக்டர்.ராஜேஷ் டி.கொச்சுபாபி,
சென்னை தாமிர ஏஸ்தெடிக் ஹெல்த்கேர் மற்றும் லைப்ஸ்டைல் நிறுவனத்தின் நிர்வாக இயக்குனரும், மருத்துவருமான டாக்டர். ஜெயந்தி ரவீந்திரன்,கோவை கங்கா மருத்துவமனையின் குழந்தைகள் எலும்பியல் அறுவைசிகிச்சை துறையின் தலைமை மருத்துவர் டாக்டர்.கே.வெங்கடதாஸ்,
யு.எஸ்.ஏ மெர்சி மெடிக்கல் குழுமத்தில் குடல்,கல்லீரல்,கணைய சிகிச்சை நிபுணராக உள்ள டாக்டர்.பழனியப்பன் மாணிக்கம் ஆகியோருக்கு விருது வழங்கி கவுரவிக்கப்பட்டனர்.

இறுதியாக,பி.எஸ்.ஜி மருத்துவக்கல்லூரி மற்றும் மருத்துவமனையின் மருத்துவ கண்காணிப்பாளர் டாக்டர்.ஆர். கார்த்திகேயன் நன்றியுரை கூறினார்.

மேலும் படிக்க