• Download mobile app
01 Mar 2026, SundayEdition - 3672
FLASH NEWS
  • “மாணவர்கள் நடத்திய மொழிப்போரில் ஸ்டிக்கர் ஒட்டிக்கொண்டது திமுக”- பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ்
  • பிரவீன் சக்ரவர்த்தியின் கருத்து காங்கிரஸ் தலைமையின் கருத்து கிடையாது – கார்த்தி சிதம்பரம்
  • ராகுல்காந்தியின் போராட்டத்திற்கு தோள் நிற்போம் – முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்
  • “ஜெயலலிதா அவர்களே என் ரோல் மாடல்” -பிரேமலதா விஜயகாந்த் பேட்டி
  • ராகுல் காந்தி கைது – தவெக தலைவர் விஜய் கண்டனம்
  • செத்து சாம்பல் ஆனாலும் தனித்துதான் போட்டி – சீமான்
  • பாகிஸ்தானின் அணு ஆயுத மிரட்டலுக்கு அஞ்சமாட்டோம் – இந்தியா
  • மத்திய ஆசிரியர் தகுதித் தேர்வு: பட்டதாரிகள் அக்.16 வரை விண்ணப்பிக்கலாம்

ஜம்மு-காஷ்மீர் பனிச்சரிவு, தமிழக ராணுவ வீ’ரர் பலி

January 27, 2017 தண்டோரா குழு

ஜம்மு காஷ்மீர் மாநிலத்தில் ஏற்பட்ட பனிச்சரிவில் தமிழக வீரர் உள்பட 10 ராணுவ வீரர்கள் உயிரிழந்தனர்.ஜம்மு காஷ்மீரில் கடந்த சில நாட்களாகவே கடுமையான உறைபனி பெய்து வருகிறது. குரேஷ் செக்டார் பகுதியில் வியாழக்கிழமை ஏற்பட்ட பனிச்சரிவில் 10 ராணுவ வீரர்கள் உயிரிழந்தனர்.

அவர்களில் ஒருவர் தமிழகத்தைச் சேர்ந்தவர் என தகவல் வெளியாகியுள்ளது.உயிரிழந்த தமிழக ராணுவ வீரர் தஞ்சை மாவட்டம் ஒரத்தநாடு அருகேயுள்ள கண்ணந்தங்குடி கிராமத்தைச் சேர்ந்த இளவரசன் (27) ஆவார். குரேஷ் பகுதியில் பனிச்சரிவில் புதைந்த மேலும் 4 ராணுவ வீரர்களின் உடல்கள் வெள்ளிக்கிழமை மீட்கப்பட்டுள்ளன. இதனால் பலியானவர்களின் எண்ணிக்கை 14 ஆக உயர்ந்துள்ளது.

மேலும் படிக்க