• Download mobile app
17 Feb 2026, TuesdayEdition - 3660
FLASH NEWS
  • “மாணவர்கள் நடத்திய மொழிப்போரில் ஸ்டிக்கர் ஒட்டிக்கொண்டது திமுக”- பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ்
  • பிரவீன் சக்ரவர்த்தியின் கருத்து காங்கிரஸ் தலைமையின் கருத்து கிடையாது – கார்த்தி சிதம்பரம்
  • ராகுல்காந்தியின் போராட்டத்திற்கு தோள் நிற்போம் – முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்
  • “ஜெயலலிதா அவர்களே என் ரோல் மாடல்” -பிரேமலதா விஜயகாந்த் பேட்டி
  • ராகுல் காந்தி கைது – தவெக தலைவர் விஜய் கண்டனம்
  • செத்து சாம்பல் ஆனாலும் தனித்துதான் போட்டி – சீமான்
  • பாகிஸ்தானின் அணு ஆயுத மிரட்டலுக்கு அஞ்சமாட்டோம் – இந்தியா
  • மத்திய ஆசிரியர் தகுதித் தேர்வு: பட்டதாரிகள் அக்.16 வரை விண்ணப்பிக்கலாம்

காரமடை பகுதியில் ஓட்டுநரை தாக்கி காரை வழிப்பறி செய்த நபர் 24 மணி நேரத்தில் கைது

December 22, 2024 தண்டோரா குழு

கோவை மாவட்டம் போத்தனூர் பகுதியில் வசிக்கும் அறிவழகன் (40) என்பவர் டேக்ஸி டிரைவராக வேலை செய்து வந்துள்ளார். கடந்த 21.12.2024 அன்று அறிவழகன் ராமகிருஷ்ணா மில்ஸ் அருகில் வாடகைக்காக காத்திருந்த போது அவ்வழியாக வந்த அடையாளம் தெரியாத நபர் தான் ஊட்டிக்கு போக வேண்டும் எனக்கூறி அறிவழகன் காரில் ஏறி காரமடை வழியாக மருதூர் காலேஜ் புரம் அருகே நிறுத்த சொன்னதாகவும் அறிவழகன் அப்பகுதியில் காரினை நிறுத்திவிட்டு சுமார் 4 மணி நேரமாக காத்திருந்துள்ளார்.

பின்னர் மாலை சுமார் 7 மணி அளவில் அறிவழகன் டிரைவர் சீட்டிற்கு உட்கார சென்றபோது பின்னால் நின்று கொண்டிருந்த அந்த நபர் திடீரென்று அறிவழகன் கழுத்தில் கத்தியை வைத்து கீறியதாகவும்,அவர் சுதாரித்துக் கொண்டு தடுத்துள்ளார்.பின்னர் அறிவழகனை கீழே தள்ளிவிட்டு சுமார் ரூபாய் 9,50,000/- மதிப்புள்ள அறிவழகன் காரை வழிப்பறி செய்து அங்கிருந்து தப்பி சென்றுள்ளார்.

மேற்படி சம்பவம் தொடர்பாக பாதிக்கப்பட்ட நபர் காரமடை காவல் நிலையத்தில் அளித்த புகாரின் அடிப்படையில் வழக்குப்பதிவு செய்யப்பட்டது. மேற்படி வழிப்பறி வழக்கில் விரைந்து குற்றவாளிகளை கைது செய்ய மாவட்ட காவல் கண்காணிப்பாளர் Dr.K.கார்த்திகேயன் உத்தரவிட்டதன் பேரில், தனிப்படைகள் அமைக்கப்பட்டு புலன்விசாரணை மேற்கொண்டு குற்றவாளியை தேடி வந்த நிலையில் இன்று (22.12.2024) மேட்டுப்பாளையம் பகுதியைச் சேர்ந்த சம்பத்குமார் மகன் தனுஷ் (20) என்பவரை பிடித்து விசாரணை மேற்கொண்டதில் மேற்படி வழிப்பறி வழக்கில் ஈடுபட்டதை ஒப்புக்கொண்டார்.

இந்நிலையில் மேற்படி நபரை கைது செய்து மேற்படி வழக்கின் சொத்தான காரை பறிமுதல் செய்து, மேற்படி நபரை நீதிமன்ற காவலுக்கு உட்படுத்தினர்.சட்டத்திற்கு புறம்பாக குற்ற செயல்களில் யாரேனும் ஈடுபட்டால் சட்டப்படி கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என கோவை மாவட்ட காவல் கண்காணிப்பாளர் எச்சரித்துள்ளார்.

குற்றங்களை தடுத்திட பொதுமக்கள் அச்சம் கொள்ள வேண்டாம்.தயங்காமல் அழைத்திடுங்கள் கோவை மாவட்ட காவல் கட்டுப்பாட்டு அறை எண் 94981-81212 மற்றும் வாட்சப் எண் 77081-00100 என்ற எண்ணிலும் தொடர்பு கொண்டு தகவல் தெரிவிக்கலாம். தகவல் தெரிவிப்போரின் ரகசியங்கள் காக்கப்படும்.

மேலும் படிக்க