• Download mobile app
04 Jul 2025, FridayEdition - 3432
FLASH NEWS
  • அமைச்சர் உதயநிதி துணை முதல்வராவதற்கு காத்திருக்கிறேன் – சபாநாயகர் அப்பாவு
  • தமிழ்நாட்டில் 11 இடங்களில் 100 டிகிரி ஃபாரன்ஹீட்க்கு மேல் வெயில் பதிவு!
  • “சந்திரபாபு நாயுடு கூறும் அனைத்துமே கட்டுக்கதைகள்” – ஜெகன் மோகன் ரெட்டி
  • மத்திய ஆசிரியர் தகுதித் தேர்வு: பட்டதாரிகள் அக்.16 வரை விண்ணப்பிக்கலாம்
  • பீகார் முன்னாள் துணை முதலமைச்சர் சுஷில் குமார் மோடி காலமானார்!
  • தமிழ்நாட்டில் +1 பொதுத்தேர்வு முடிவுகள் வெளியானது.. 91.17% பேர் தேர்ச்சி..!
  • வள்ளுவரைப் பற்றிய அடிப்படை புரிதல் ஆளுநருக்கு இல்லை: கனிமொழி
  • தெலங்கானா முதலமைச்சராக பதவியேற்றார் ரேவந்த் ரெட்டி;
  • தமிழகத்தில் இயல்பை விட இந்த ஆண்டு, வடகிழக்கு பருவமழை குறைவு –
  • மிக்ஜாம் புயல்: தமிழ்நாட்டுக்கு ரூ.450 கோடி நிதி ஒதுக்கீடு!
  • மத்தியில் ஆட்சிக்கு வந்ததும் சாதிவாரி கணக்கெடுப்பை நடத்துவோம்-ராகுல் காந்தி

மழை பெய்ய வாய்ப்பு…

January 26, 2017 தண்டோரா குழு

தமிழகத்தில் உள்ள கடலோர மாவட்டங்களில் பெரும்பாலான பகுதிகளில் மழை பெய்ய வாய்ப்பு உள்ளது என சென்னை வானிலை ஆய்வு மைய இயக்குநர் பாலசந்திரன் தெரிவித்துள்ளார்.

இது குறித்து அவர் செய்தியாளர்களிடம் வியாழக்கிழமை கூறுகையில், “தென்மேற்கு வங்கக் கடல் பகுதியில் குறைந்த காற்றழுத்த தாழ்வுநிலை நிலவி வருகிறது. அதே போல் மாலத்தீவு அருகே மற்றொரு குறைந்த காற்றழுத்த தாழ்வு நிலை நிலவி வருகிறது.

இந்தக் காற்றழுத்தத் தாழ்வுநிலை காரணமாக தமிழகத்தில் உள்ள கடலோர மாவட்டங்களில் பெரும்பாலான பகுதிகளில் மழை பெய்ய வாய்ப்பு உள்ளது. தமிழகத்தின் உள் மாவட்டங்களில் ஒரு சில இடங்களில் லேசான மழை பெய்யக்கூடும்.

சென்னையில் வானம் மேகமூட்டத்துடன் காணப்படும். கடந்த 24 மணி நேரத்தில் திருவாரூர், நாகை மாவட்டத்தில் 2 செ.மீ., மழை பதிவாகியுள்ளது” என்றார் பாலசந்திரன்.

மேலும் படிக்க