• Download mobile app
18 May 2024, SaturdayEdition - 3020
FLASH NEWS
  • பீகார் முன்னாள் துணை முதலமைச்சர் சுஷில் குமார் மோடி காலமானார்!
  • தமிழ்நாட்டில் +1 பொதுத்தேர்வு முடிவுகள் வெளியானது.. 91.17% பேர் தேர்ச்சி..!
  • வள்ளுவரைப் பற்றிய அடிப்படை புரிதல் ஆளுநருக்கு இல்லை: கனிமொழி
  • தெலங்கானா முதலமைச்சராக பதவியேற்றார் ரேவந்த் ரெட்டி;
  • தமிழகத்தில் இயல்பை விட இந்த ஆண்டு, வடகிழக்கு பருவமழை குறைவு –
  • மிக்ஜாம் புயல்: தமிழ்நாட்டுக்கு ரூ.450 கோடி நிதி ஒதுக்கீடு!
  • மத்தியில் ஆட்சிக்கு வந்ததும் சாதிவாரி கணக்கெடுப்பை நடத்துவோம்-ராகுல் காந்தி

ஒரே நேரத்தில் தேர்தல் நடத்த முடியும்

January 25, 2017 தண்டோரா குழு

இந்தியாவில் கூடுதல் நிதி ஆதாரங்களோடு நாடாளுமன்றத்திற்கும், சட்டப் பேரவைகளுக்கும் ஒரே நேரத்தில் தேர்தல் நடத்த முடியும் என இந்திய தலைமை தேர்தல் ஆணையர் நஸீம் ஜைதி கூறியுள்ளார்.

புது தில்லியில் 7-வது வாக்காளர்கள் தினத்தையொட்டி கருத்தரங்கம் புதன்கிழமை நடைபெற்றது. அதில் பங்கேற்று அவர் பேசியதாவது;

“இந்தியாவில் இனி வரும் காலங்களில் கூடுதல் நிதி ஆதாரங்களோடு நாடாளுமன்றத்திற்கும், மாநிலங்களின் சட்டப் பேரவைகளுக்கும் ஒரே நேரத்தில் தேர்தல் நடத்த முடியும். ஆனால், அதற்கு இரண்டு முக்கிய நிபந்தனைகள் உள்ளன.

முதலாவதாக அனைத்து அரசியல் கட்சிகளிடம் அரசியல் கருத்தொற்றுமை ஏற்படுத்தி தேர்தலுக்கு ஏற்றவாறு சட்டத் திருத்தங்கள் செய்யப்பட வேண்டும். அடுத்து, மின்னணு வாக்கு எந்திரங்கள் அதிக அளவு வாங்குவதற்குக் கூடுதல் நிதி தேவை.

இது தொடர்பாகத் தேர்தல் ஆணையத்தின் கருத்துகள் மத்திய சட்ட அமைச்சகத்திற்கும், நாடாளுமன்ற நிலைக்குழுவிற்கும் ஏற்கனவே தெரிவிக்கப்பட்டுள்ளது. நாடாளுமன்றத்திற்கும், சட்டப் பேரவைகளுக்கும் ஒரே நேரத்தில் தேர்தல் நடத்த சுமார் ரூ.9,000 கோடி தேவைப்படும்”
இவ்வாறு நஸீம் ஜைதி பேசினார்.

மேலும் படிக்க