• Download mobile app
13 Jun 2026, SaturdayEdition - 3776
FLASH NEWS
  • எங்களை நீக்குவதற்கு இபிஎஸ்க்கு அதிகாரம் இல்லை.. – சி. வி.சண்முகம்
  • எஸ்.பி.வேலுமணி, சி.வி.சண்முகம் உள்ளிட்ட MLA-க்கள் பதவி பறிப்பு
  • ”நீட் தேர்வை முழுமையாக ரத்து செய்ய வேண்டும்”- முதல்வர் விஜய்
  • “மாணவர்கள் நடத்திய மொழிப்போரில் ஸ்டிக்கர் ஒட்டிக்கொண்டது திமுக”- பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ்
  • பிரவீன் சக்ரவர்த்தியின் கருத்து காங்கிரஸ் தலைமையின் கருத்து கிடையாது – கார்த்தி சிதம்பரம்
  • “ஜெயலலிதா அவர்களே என் ரோல் மாடல்” -பிரேமலதா விஜயகாந்த் பேட்டி
  • ராகுல் காந்தி கைது – தவெக தலைவர் விஜய் கண்டனம்
  • செத்து சாம்பல் ஆனாலும் தனித்துதான் போட்டி – சீமான்
  • பாகிஸ்தானின் அணு ஆயுத மிரட்டலுக்கு அஞ்சமாட்டோம் – இந்தியா
  • மத்திய ஆசிரியர் தகுதித் தேர்வு: பட்டதாரிகள் அக்.16 வரை விண்ணப்பிக்கலாம்

தமிழக காவலர்களுக்கு “குடியரசுத் தலைவர் விருது”

January 24, 2017 தண்டோரா குழு

68-வது குடியரசு தின விழாவை முன்னிட்டு தமிழக காவல் துறையில் சிறப்பாகப் பணியாற்றிய காவலர்கள் மற்றும் தீயணைப்புத் துறையைச் சேர்ந்தவர்களுக்குத் தமிழகத்தில் “குடியரசுத் தலைவர் விருது” வழங்கப்பட உள்ளது.

சிறப்பாகப் பணியாற்றிய காவல் துறை மற்றும் தீயணைப்புத் துறையைச் சேர்ந்தவர்களுக்கு ஒவ்வொரு வருடமும் குடியரசுத் தலைவர் விருது வழங்கப்படுவது வழக்கம்.

இந்நிலையில் சிறப்பாக செயல்பட்ட தமிழக காவலர்கள் தஞ்சை சிறப்புப் பிரிவு, உதவி ஆய்வாளர் வீராசாமி, திருச்சி பொன்மலை உதவி ஆணையர் மாணிக்கவேல், திருவொற்றியூர் உதவி ஆணையர் குமார், கிருஷ்ணகிரி காவல்துறை கண்காணிப்பாளர் கண்ணன், தூத்துக்குடி ஊழல் தடுப்பு ஆய்வாளர் ரகுபதி மற்றும் எழும்பூர் சி.பி.- சி.ஐ.டி. அதிகாரி அருள்தாஸ் ஆகியோர் உட்பட 22 பேருக்கு குடியரசுத் தலைவர் விருது வழங்குவதாக மத்திய அரசு அறிவித்துள்ளது.

குடியரசு தினத்தன்று தில்லியில் நடைபெற உள்ள விழாவின்போது இந்த விருது வழங்கப்படுகிறது.

மேலும் படிக்க