• Download mobile app
31 May 2026, SundayEdition - 3763
FLASH NEWS
  • எங்களை நீக்குவதற்கு இபிஎஸ்க்கு அதிகாரம் இல்லை.. – சி. வி.சண்முகம்
  • எஸ்.பி.வேலுமணி, சி.வி.சண்முகம் உள்ளிட்ட MLA-க்கள் பதவி பறிப்பு
  • ”நீட் தேர்வை முழுமையாக ரத்து செய்ய வேண்டும்”- முதல்வர் விஜய்
  • “மாணவர்கள் நடத்திய மொழிப்போரில் ஸ்டிக்கர் ஒட்டிக்கொண்டது திமுக”- பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ்
  • பிரவீன் சக்ரவர்த்தியின் கருத்து காங்கிரஸ் தலைமையின் கருத்து கிடையாது – கார்த்தி சிதம்பரம்
  • “ஜெயலலிதா அவர்களே என் ரோல் மாடல்” -பிரேமலதா விஜயகாந்த் பேட்டி
  • ராகுல் காந்தி கைது – தவெக தலைவர் விஜய் கண்டனம்
  • செத்து சாம்பல் ஆனாலும் தனித்துதான் போட்டி – சீமான்
  • பாகிஸ்தானின் அணு ஆயுத மிரட்டலுக்கு அஞ்சமாட்டோம் – இந்தியா
  • மத்திய ஆசிரியர் தகுதித் தேர்வு: பட்டதாரிகள் அக்.16 வரை விண்ணப்பிக்கலாம்

அமிர்தா வேளாண் கல்லூரி மாணவர்கள் விவசாயிகளுக்கு தேனீ வளர்ப்பு மற்றும் அசோலா வளர்ப்பு குறித்து செயல்முறை விளக்கம்

February 16, 2024 தண்டோரா குழு

கிணத்துக்கடவு,அரசம்பாளையத்தில் உள்ள அமிர்தா வேளாண்மை கல்லூரியில் நான்காம் ஆண்டு பயிலும் மாணவர்கள் தங்கள் ஊரக வேளாண்மை செயல்முறை பயிற்சி அனுபவத் திட்டத்தின் ( RAWE ) கீழ் வேளாண்மையில் தொழில்நுட்ப செயல்முறை பயிற்சி அளித்தனர்.

குருநல்லிபாளையத்தில் உள்ள பஞ்சாயத்து அலுவலகத்தின் அருகில் நடந்த நிகழ்வில் , கல்லூரி முதல்வர் முனைவர் சுதீஷ் மணலில்,RAWE ஒருங்கிணைப்பாளர் முனைவர்.சிவராஜ் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.

இந்நிகழ்வில் ஏராளமான விவசாயிகள் கலந்து கொண்டனர் அமிர்தா வேளாண்மை கல்லூரி மாணவ மாணவிகள் பார்வதி எஸ், ஐஃபா அம்ரின், தேவநந்தனா பினுராஜ் , கிருஷ்ணா, நட்சத்திரா, ஜெயஸ்ரீ, வரதா அருண், அபிஜித் ராபி, ஆதிரா ராஜன் , ஆயிஷா ஷபானா, ஸ்ரீகாந்த், நேஹா மாதவன், அக்ஷத் கே அணில், தீட்சண்யா பி , சோனா சரஸ்வதி ஆகியோரால் பயிற்சி அளிக்கப்பட்டது.

மாணவர்கள் அசோலா வளர்ப்பு மற்றும் தேனீ வளர்ப்பு பற்றி விரிவாக விளக்க உரையை வழங்கினர்.அசோலா உற்பத்தி செய்வது எவ்வாறு என்பது செயல்முறையாக காண்பித்து, அசோலாவை பயிரிட்டனர். மேலும்,அசோலா வளர்ப்பின் போது பின்பற்ற வேண்டிய விதி முறைகள் , அதன் பராமரிப்பு முறைகள், அதனால் ஏற்படும் நன்மைகள் குறித்து விரிவாக விளக்கம் அளித்தனர்.

இதனை கோழிகளுக்கு உணவாகத் தரும் போது அதன் எடை அதிகரிக்கும் என்பதையும் , பசுமாடுகளுக்கு உணவாக தரும் போது பால் உற்பத்தி அதிகரிக்கும் என்பதையும் எடுத்துரைத்தனர் . அதைத் தொடர்ந்து தேனீ வளர்ப்பு பற்றி விளக்கம் அளித்தனர் . அதன் முக்கியத்துவம் மற்றும் அதனால் ஏற்படும் நன்மைகள் பற்றி விளக்கம் அளித்தனர்.

தேனை உணவாக , மருந்தாக மற்றும் அழகு சாதனப் பொருட்களாக பயன்படுத்தலாம் . தேனீ வளர்ப்பின் போது தேவைப்படும் பொருட்களை காண்பித்து அதை எவ்வாறு பயன்படுத்த வேண்டும் என்று கூறினர் . இப்பயிற்சின் போது விவசாயிகள் தங்கள் அனுபவத்தை மாணவர்களிடம் பகிர்ந்து கொண்டனர்.

மேலும் படிக்க