• Download mobile app
13 May 2024, MondayEdition - 3015
FLASH NEWS
  • வள்ளுவரைப் பற்றிய அடிப்படை புரிதல் ஆளுநருக்கு இல்லை: கனிமொழி
  • தெலங்கானா முதலமைச்சராக பதவியேற்றார் ரேவந்த் ரெட்டி;
  • தமிழகத்தில் இயல்பை விட இந்த ஆண்டு, வடகிழக்கு பருவமழை குறைவு –
  • மிக்ஜாம் புயல்: தமிழ்நாட்டுக்கு ரூ.450 கோடி நிதி ஒதுக்கீடு!
  • மத்தியில் ஆட்சிக்கு வந்ததும் சாதிவாரி கணக்கெடுப்பை நடத்துவோம்-ராகுல் காந்தி

பேருந்து விபத்தில் 7 சிறுவர்கள் பலி

January 21, 2017 தண்டோரா குழு

இத்தாலி நாட்டின் வடக்கு பகுதியில் சிறுவர்களை அழைத்துச் சென்ற பேருந்து விபத்தில் சிக்கியதால் 7 பேர் உயிரிழந்தனர். இந்த விபத்து இத்தாலி நேரப்படி வெள்ளிக்கிழமை இரவு நேர்ந்திருக்கிறது.

இது குறித்து அந்நாட்டின் காவல்துறை அதிகாரி ஒருவர் செய்தியாளர்களிடம் கூறியதாவது:

ரோம் நாட்டின் உள்ள வெரோனா நகரைச் சுற்றிப் பார்க்க ஹங்கேரி நாட்டைச் சேர்ந்த சிறுவர்கள் சுற்றுலா மேற்கொண்டனர். அவர்களை அழைத்துச் சென்ற பேருந்து காட்டுப்பாட்டை இழந்து வடக்கு இத்தாலி பகுதியில் உள்ள சாலையில் இருந்த கோபுரம் போன்ற சுவரின் மீது மோதியது. அதில் 7 சிறுவர்கள் அங்கேயே உயிரிழந்தனர். மற்றவர்கள் காயமடைந்தனர்.

தகவல் அறிந்த வெரோனா காவல்துறையினர் சம்பவ இடத்திற்கு விரைந்தனர். காயமடைந்தவர்களை அருகிலுள்ள மருத்துவமனையில் சேர்த்துள்ளனர். மருத்துவர்கள் சிகிச்சை அளித்து வருகின்றனர். உயிரிழந்தவர்களில் பேருந்து ஓட்டுநரும் ஒருவர் என்று கருதப்படுகிறது.
இச்சம்பவம் குறித்து விசாரணை மேற்கொள்ளப்பட்டு வருகிறது.

இவ்வாறு அவர் தெரிவித்தார்.

மேலும் படிக்க