• Download mobile app
20 May 2024, MondayEdition - 3022
FLASH NEWS
  • பீகார் முன்னாள் துணை முதலமைச்சர் சுஷில் குமார் மோடி காலமானார்!
  • தமிழ்நாட்டில் +1 பொதுத்தேர்வு முடிவுகள் வெளியானது.. 91.17% பேர் தேர்ச்சி..!
  • வள்ளுவரைப் பற்றிய அடிப்படை புரிதல் ஆளுநருக்கு இல்லை: கனிமொழி
  • தெலங்கானா முதலமைச்சராக பதவியேற்றார் ரேவந்த் ரெட்டி;
  • தமிழகத்தில் இயல்பை விட இந்த ஆண்டு, வடகிழக்கு பருவமழை குறைவு –
  • மிக்ஜாம் புயல்: தமிழ்நாட்டுக்கு ரூ.450 கோடி நிதி ஒதுக்கீடு!
  • மத்தியில் ஆட்சிக்கு வந்ததும் சாதிவாரி கணக்கெடுப்பை நடத்துவோம்-ராகுல் காந்தி

அமெரிக்க கல்லூரியில் மாணவன் துப்பாக்கி சூடு 3 பேர் பலி

January 19, 2017 தண்டோரா குழு

வட மெக்ஸிகோவில் உள்ள அமெரிக்க கல்லூரியில் மாணவன் ஒருவர் நடத்திய துப்பாக்கி சூட்டில் 3 பேர் உயிரிழந்தனர்.இது குறித்து உள்நாட்டு பாதுகாப்பு அதிகாரி ஆஸ்கார் அபாய்டேஸ் கூறுகையில், “வட மெக்ஸிகோ மொன்ட்டேரே என்ற இடத்தில் இருக்கும் அமெரிக்க கல்லூரியில் இச்சம்பவம் செவ்வாய்க்கிழமை நடந்துள்ளது.

அக்கல்லூரியில் படித்து வரும் ஃபெட்ரிகோ குவேரா என்ற மாணவர் தன் சக மாணவர்கள் மீது திடீரஎன்று துப்பாக்கியால் சுட்டிருக்கிறார். அதில் 3 பேர் உயிரிழந்தனர். பிறகு தன்னைத் தானே சுட்டுக் கொண்டான். சம்பவம் அறிந்த காவல் துறையினர் மற்றும் ஆம்புலன்ஸ் அக்கல்லூரிக்கு விரைந்தனர்” என்றார்.

நியூவோ லியோன் மாநில பாதுகாப்பு செய்தி தொடர்பாளர் ஆல்டோ பாஸ்கி கூறுகையில், “15 வயது மாணவன் ஒருவன் துப்பாக்கியால் முதலில் 24 வயது ஆசிரியர், பிறகு 14 வயது மாணவி, 14 வயது மாணவன் தலையில் சுட்டதில் 3 பேரும் சம்பவ இடத்தில் உயிரிழந்தனர். 15 வயது மற்றொரு மாணவன் கையில் சுட்டதால் காயமடைந்தான். பிறகு அதே துப்பாக்கியால் தன்னையே சுட்டுக்கொண்டான். காயமடைந்த மாணவன் அருகில் உள்ள மருத்துவமனையில் சேர்க்கப்பட்டுள்ளான். அவனுக்கு மருத்துவர்கள் சிகிச்சை அளித்து வருகின்றனர்” என்றார்.

மேலும் படிக்க