• Download mobile app
07 May 2025, WednesdayEdition - 3374
FLASH NEWS
  • அமைச்சர் உதயநிதி துணை முதல்வராவதற்கு காத்திருக்கிறேன் – சபாநாயகர் அப்பாவு
  • தமிழ்நாட்டில் 11 இடங்களில் 100 டிகிரி ஃபாரன்ஹீட்க்கு மேல் வெயில் பதிவு!
  • “சந்திரபாபு நாயுடு கூறும் அனைத்துமே கட்டுக்கதைகள்” – ஜெகன் மோகன் ரெட்டி
  • மத்திய ஆசிரியர் தகுதித் தேர்வு: பட்டதாரிகள் அக்.16 வரை விண்ணப்பிக்கலாம்
  • பீகார் முன்னாள் துணை முதலமைச்சர் சுஷில் குமார் மோடி காலமானார்!
  • தமிழ்நாட்டில் +1 பொதுத்தேர்வு முடிவுகள் வெளியானது.. 91.17% பேர் தேர்ச்சி..!
  • வள்ளுவரைப் பற்றிய அடிப்படை புரிதல் ஆளுநருக்கு இல்லை: கனிமொழி
  • தெலங்கானா முதலமைச்சராக பதவியேற்றார் ரேவந்த் ரெட்டி;
  • தமிழகத்தில் இயல்பை விட இந்த ஆண்டு, வடகிழக்கு பருவமழை குறைவு –
  • மிக்ஜாம் புயல்: தமிழ்நாட்டுக்கு ரூ.450 கோடி நிதி ஒதுக்கீடு!
  • மத்தியில் ஆட்சிக்கு வந்ததும் சாதிவாரி கணக்கெடுப்பை நடத்துவோம்-ராகுல் காந்தி

மறைந்த மூத்த வழக்கறிஞர் டாக்டர் பா.குப்புசாமியின் நினைவு புகைப்படம் திறப்பு

July 21, 2023 தண்டோரா குழு

மாவட்டத்தின் பிரபல சிவில் வழக்கறிஞர்களில் ஒருவரான மூத்தவழக்கறிஞர் டாக்டர் பா.குப்புசாமி (1932-2016) அவர்களுக்கு அஞ்சலி செலுத்தும் விதமாக கோவைவழக்கறிஞர்கள் சங்கம் சார்பில் கோவை மாவட்ட நீதிமன்ற வளாகத்தில் உள்ளநூலகத்தில் நிறுவப்பட உள்ள அவரது புகைப்படம் இன்று (21.7.2023) திறந்துவைக்கப்பட்டது.

கோயம்புத்தூர் முதன்மை மாவட்ட நீதிபதி எம்.என்.செந்தில் குமார் முன்னிலையில் தமிழ்நாடு மாநிலமனித உரிமைகள் ஆணையத் தலைவர் நீதிபதி(ஒய்வு) எஸ்.பாஸ்கரன், கோவை வழக்கறிஞர் சங்கத் தலைவர் கே.எம்.தண்டபாணி, மூத்தவழக்கறிஞர் மற்றும் சிபிஐ முன்னாள் அரசுவழக்கறிஞர் என்.சுந்தரவடிவேலு உள்ளிட்ட 100க்கும் மேற்பட்ட வழக்கறிஞர்கள், விருந்தினர்கள் கலந்து கொண்டு புகைப்படத்தை வெளியிட்டனர்.

இந்நிகழ்ச்சியில் டாக்டர் குப்புசாமியின் சிறு வாழ்க்கை வரலாறும் புத்தகமும் வெளியிடப்பட்டது. கோயம்புத்தூர் வழக்கறிஞர்கள் சங்கத் தலைவர் கே.எம்.தண்டபாணி வரவேற்றுப் பேசுகையில், நீதிமன்றத்தில் டாக்டர் குப்புசாமியின் வாதங்கள் துல்லியமாகவும், விவரங்கள் நிறைந்ததாகவும், எளிதில் புரிந்துகொள்ளக்கூடியதாகவும் இருக்கும் என்றார்.

அவர்வாதிட்ட அனைத்து வழக்குகளிலும் டாக்டர் குப்புசாமி சிறந்த முடிவுகளைப் பெற்றார் என்று கூறினார்.

மேலும் படிக்க