• Download mobile app
23 Jul 2026, ThursdayEdition - 3816
FLASH NEWS
  • தமிழக சட்டப்பேரவையில் காலியிடங்கள் 6 ஆக உயர்வு
  • யூதர்களின் நாட்டை அழிக்க ஈரான் முயற்சி – இஸ்ரேல் பிரதமர் நெதன்யாகு
  • “மக்களால் நிராகரிக்கப்பட்டவர் ஸ்டாலின்!” – செங்கோட்டையன்
  • எங்களை நீக்குவதற்கு இபிஎஸ்க்கு அதிகாரம் இல்லை.. – சி. வி.சண்முகம்
  • எஸ்.பி.வேலுமணி, சி.வி.சண்முகம் உள்ளிட்ட MLA-க்கள் பதவி பறிப்பு
  • ”நீட் தேர்வை முழுமையாக ரத்து செய்ய வேண்டும்”- முதல்வர் விஜய்
  • “மாணவர்கள் நடத்திய மொழிப்போரில் ஸ்டிக்கர் ஒட்டிக்கொண்டது திமுக”- பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ்
  • பிரவீன் சக்ரவர்த்தியின் கருத்து காங்கிரஸ் தலைமையின் கருத்து கிடையாது – கார்த்தி சிதம்பரம்
  • “ஜெயலலிதா அவர்களே என் ரோல் மாடல்” -பிரேமலதா விஜயகாந்த் பேட்டி
  • ராகுல் காந்தி கைது – தவெக தலைவர் விஜய் கண்டனம்
  • செத்து சாம்பல் ஆனாலும் தனித்துதான் போட்டி – சீமான்
  • பாகிஸ்தானின் அணு ஆயுத மிரட்டலுக்கு அஞ்சமாட்டோம் – இந்தியா
  • மத்திய ஆசிரியர் தகுதித் தேர்வு: பட்டதாரிகள் அக்.16 வரை விண்ணப்பிக்கலாம்

சாலையோர வியாபாரிகளுக்கு மாநகராட்சி பெயரில் தனிப்பட்ட அமைப்பினரால் வழங்கப்பட்ட அடையாள அட்டை செல்லுபடி ஆகாது

July 5, 2023 தண்டோரா குழு

கோவை மாநகராட்சி கமிஷனர் மு.பிரதாப் கூறியிருப்பதாவது:

கோவை மாநகராட்சிக்கு உட்பட்ட பகுதியில் சாலையோர வியாபாரிகளுக்கு அடையாள அட்டை மற்றும் வியாபார சான்றிதழ் வழங்குவதற்காக நியமிக்கப்பட்ட கணக்கெடுப்பாளர்கள் வியாபாரிகளின்

இடங்களுக்கே நேரில்வந்து கணக்கெடுப்பு பணி மேற்கொள்வார்கள். எனவே, அனைத்து சாலையோர வியாபாரிகளும் அசல் ஆதார் அட்டை, வாக்காளர் அட்டை, வங்கி கணக்கு புத்தகம் மற்றும் குடும்ப அட்டை ஆகிய ஆவணங்களுடன் கணக்கெடுப்பாளர்களுக்கு ஒத்துழைப்பு வழங்கவும், இனிவரும் காலங்களில் இந்த அடையாள அட்டை வைத்திருக்கும் சாலையோர வியாபாரிகள் மட்டுமே அரசு நலத்திட்டங்கள் பெறவும், மாநகராட்சி பகுதிகளில் வியாபாரம்செய்யவும் அனுமதிக்கப்படுவார்கள். மாநகராட்சி பெயரில் தனிப்பட்ட அமைப்பினரால் வழங்கப்பட்ட எந்தவித அடையாள அட்டையும் செல்லுபடி ஆகாது. மேலும் விவரங்களுக்கு சாலையோர வியாபாரிகள் மாநகராட்சி

சுகாதாரத்துறை வியாபாரிகள் திட்ட சாலையோர அலுவலகத்தில் ஒருங்கிணைப்பாளரை தொடர்பு கொள்ளலாம்.மாநகராட்சியால் அனுமதிக்கப்பட்ட கணக்கெடுப்பாளர்கள் தவிர வேறு நபர்கள் அடையாள அட்டை வழங்கினால் கடுமையான சட்டப்பூர்வ நடவடிக்கை மேற்கொள்ளப்படும்.

இவ்வாறு அவர் கூறினார்.

மேலும் படிக்க