• Download mobile app
10 May 2025, SaturdayEdition - 3377
FLASH NEWS
  • அமைச்சர் உதயநிதி துணை முதல்வராவதற்கு காத்திருக்கிறேன் – சபாநாயகர் அப்பாவு
  • தமிழ்நாட்டில் 11 இடங்களில் 100 டிகிரி ஃபாரன்ஹீட்க்கு மேல் வெயில் பதிவு!
  • “சந்திரபாபு நாயுடு கூறும் அனைத்துமே கட்டுக்கதைகள்” – ஜெகன் மோகன் ரெட்டி
  • மத்திய ஆசிரியர் தகுதித் தேர்வு: பட்டதாரிகள் அக்.16 வரை விண்ணப்பிக்கலாம்
  • பீகார் முன்னாள் துணை முதலமைச்சர் சுஷில் குமார் மோடி காலமானார்!
  • தமிழ்நாட்டில் +1 பொதுத்தேர்வு முடிவுகள் வெளியானது.. 91.17% பேர் தேர்ச்சி..!
  • வள்ளுவரைப் பற்றிய அடிப்படை புரிதல் ஆளுநருக்கு இல்லை: கனிமொழி
  • தெலங்கானா முதலமைச்சராக பதவியேற்றார் ரேவந்த் ரெட்டி;
  • தமிழகத்தில் இயல்பை விட இந்த ஆண்டு, வடகிழக்கு பருவமழை குறைவு –
  • மிக்ஜாம் புயல்: தமிழ்நாட்டுக்கு ரூ.450 கோடி நிதி ஒதுக்கீடு!
  • மத்தியில் ஆட்சிக்கு வந்ததும் சாதிவாரி கணக்கெடுப்பை நடத்துவோம்-ராகுல் காந்தி

கோவை அரசு மருத்துவமனையில் பெண்ணுக்கு கிட்னி மாற்று அறுவை சிகிச்சை

June 10, 2023 தண்டோரா குழு

கோவை அரசு மருத்துவமனையில் 38 வயது பெண் ஒருவர் சிறுநீரகம் (கிட்னி) பாதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வந்தார்.அவருக்கு டாக்டர்கள் சிறுநீரக மாற்று அறுவைசிகிச்சை முடிவு செய்தனர். இதையடுத்து, அவர்கள் சிறுநீரகம் கேட்டு பதிவு செய்திருந்தனர்.

இந்நிலையில், சேலத்தை சேர்ந்த 52 வயது ஆண் ஒருவர் உடல்நிலை பாதிப்பின் காரணமாக மூளைச்சாவு அடைந்தார்.அவரது சிறுநீரகத்தை அவர்களின் உறவினர்கள் தானமாக அளிக்க முன்வந்தனர். அதன்படி, அவரின் வலது பக்கத்தில் உள்ள சிறுநீரகத்தை தானமாக பெறப்பட்டு தமிழக முதல்வரின் காப்பீட்டு திட்டத்தின் கீழ் கோவை அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த 38 வயது பெண்ணிற்கு டாக்டர்கள் பொருத்தினர்.

மேலும், கிட்னி மாற்று அறுவைசிகிச்சையை வெற்றிகரமாக மேற்கொண்ட மருத்துவ குழுவினருக்கு மருத்துவமனையின் டீன் நிர்மலா பாராட்டுகளை தெரிவித்தார்.

மேலும் படிக்க