• Download mobile app
01 Jun 2026, MondayEdition - 3764
FLASH NEWS
  • எங்களை நீக்குவதற்கு இபிஎஸ்க்கு அதிகாரம் இல்லை.. – சி. வி.சண்முகம்
  • எஸ்.பி.வேலுமணி, சி.வி.சண்முகம் உள்ளிட்ட MLA-க்கள் பதவி பறிப்பு
  • ”நீட் தேர்வை முழுமையாக ரத்து செய்ய வேண்டும்”- முதல்வர் விஜய்
  • “மாணவர்கள் நடத்திய மொழிப்போரில் ஸ்டிக்கர் ஒட்டிக்கொண்டது திமுக”- பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ்
  • பிரவீன் சக்ரவர்த்தியின் கருத்து காங்கிரஸ் தலைமையின் கருத்து கிடையாது – கார்த்தி சிதம்பரம்
  • “ஜெயலலிதா அவர்களே என் ரோல் மாடல்” -பிரேமலதா விஜயகாந்த் பேட்டி
  • ராகுல் காந்தி கைது – தவெக தலைவர் விஜய் கண்டனம்
  • செத்து சாம்பல் ஆனாலும் தனித்துதான் போட்டி – சீமான்
  • பாகிஸ்தானின் அணு ஆயுத மிரட்டலுக்கு அஞ்சமாட்டோம் – இந்தியா
  • மத்திய ஆசிரியர் தகுதித் தேர்வு: பட்டதாரிகள் அக்.16 வரை விண்ணப்பிக்கலாம்

கோவையில் ஆம்புலன்சில் பிறந்த பெண் குழந்தை

June 8, 2023 தண்டோரா குழு

கோவை ஜி.டி டேங்க் பகுதியை சேர்ந்தவர் சின்னையா (26).இவரது மனைவி தனலட்சுமி (23). நிறைமாத கர்ப்பிணியான இவருக்கு நேற்று முன்தினம் நள்ளிரவில் இரவு வீட்டில் இருந்த போது பனிக்குடம் உடைந்தது.இதனால் மிகுந்த வலியுடன் துடித்து வந்தார்.இதையடுத்து 108 ஆம்புலன்ஸ்க்கு தகவல் தெரிவித்தனர்.

உடனடியாக ஆம்புலன்ஸ் வந்தது. அதில் தனலட்சுமியை அழைத்துக்கொண்டு குறிச்சி சுகாதார நிலைய மருத்துவமனைக்கு புறப்பட்டனர்.அப்போது, ரயில் மண்டபம் அருகே வந்த போது தனலட்சுமிக்கு வலி அதிகரித்தது. மேலும் குழந்தையின் தலை வெளியே வந்தது. இதையடுத்து ஆம்புலன்ஸ் மருத்துவ நிபுணர் கற்பகம், சாலை அருகே ஆம்புலன்சை நிறுத்தி ஓட்டுநர் யுவராஜ் உதவியுடன் பிரசவம் பார்த்தனர்.அவருக்கு அழகான பெண் குழந்தை பிறந்தது.அவசரம் கருதி பிரசவம் பார்த்த ஆம்புலன்ஸ் ஊழியர்களுக்கு பாராட்டு குவிந்தது

மேலும் படிக்க