• Download mobile app
17 Nov 2025, MondayEdition - 3568
FLASH NEWS
  • ராகுல்காந்தியின் போராட்டத்திற்கு தோள் நிற்போம் – முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்
  • “ஜெயலலிதா அவர்களே என் ரோல் மாடல்” -பிரேமலதா விஜயகாந்த் பேட்டி
  • ராகுல் காந்தி கைது – தவெக தலைவர் விஜய் கண்டனம்
  • செத்து சாம்பல் ஆனாலும் தனித்துதான் போட்டி – சீமான்
  • பாகிஸ்தானின் அணு ஆயுத மிரட்டலுக்கு அஞ்சமாட்டோம் – இந்தியா
  • மத்திய ஆசிரியர் தகுதித் தேர்வு: பட்டதாரிகள் அக்.16 வரை விண்ணப்பிக்கலாம்

கோவையில் 25 ஆயிரம் கிலோ மாம்பழம் மற்றும் சாத்துக்குடிகள் பறிமுதல்

May 11, 2023 தண்டோரா குழு

கோவையில் மாம்பழம், சாத்துக்குடி என ரசாயனத்தை கொண்டு பழுக்க வைக்கப்பட்ட பழங்களை உணவு பாதுகாப்பு துறை அதிகாரிகள் பறிமுதல் செய்துள்ளனர்.உணவு பாதுகாப்பு துறை அலுவலர் தமிழ்செல்வன் தலைமையில், கோவை மாநகரில் உள்ள வைசியாள் வீதி, பெரிய கடைவீதி, பவள வீதி-1, பவள வீதி-II, கருப்பன கவுண்டர் வீதி, முத்து விநாயகர் கோவில் வீதி, தர்மராஜா கோவில் வீதி, கெம்பட்டி காலனி வீதி ஆகிய பகுதிகளில் எட்டு குழுவாக திடீர் கள ஆய்வு மேற்கொண்டனர்.

இந்த திடீர் கள ஆய்வின் போது 45 கடைகள் மற்றும் குடோன்கள் ஆய்வு செய்யப்பட்டது. அதில் 16 கடை மற்றும் குடோன்களில் சிறிய இரசாயன பொட்டலங்களை ஒவ்வொரு பழ பெட்டிகளுக்குள் வைக்கப்பட்டுள்ளதை கண்டுபிடித்தனர்.இதைத் தொடர்ந்து அதிகாரிகள் 22,500 கிலோ பழுக்க வைக்கப்பட்ட மாம்பழங்கள் மற்றும் 2.500 கிலோ சாத்துகுடி என மொத்தம் 25 ஆயிரம் கிலோ மாம்பழம், சாத்துக்குடி போன்ற பழங்களை பறிமுதல் செய்துள்ளனர்.

மேலும் பறிமுதல் செய்யப்பட்ட பழங்களின் சந்தை மதிப்பு சுமார் 12 லட்சத்து 56 ஆயிரத்து 400 ரூபாய் என அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
இதைத்தொடர்ந்து 16 கடைகள் மற்றும் குடோன்களுக்கு உணவு பாதுகாப்பு துறையின் சார்பில் நோட்டீஸ் வழங்கப்பட்டுள்ளது.

மேலும் படிக்க