• Download mobile app
12 May 2025, MondayEdition - 3379
FLASH NEWS
  • அமைச்சர் உதயநிதி துணை முதல்வராவதற்கு காத்திருக்கிறேன் – சபாநாயகர் அப்பாவு
  • தமிழ்நாட்டில் 11 இடங்களில் 100 டிகிரி ஃபாரன்ஹீட்க்கு மேல் வெயில் பதிவு!
  • “சந்திரபாபு நாயுடு கூறும் அனைத்துமே கட்டுக்கதைகள்” – ஜெகன் மோகன் ரெட்டி
  • மத்திய ஆசிரியர் தகுதித் தேர்வு: பட்டதாரிகள் அக்.16 வரை விண்ணப்பிக்கலாம்
  • பீகார் முன்னாள் துணை முதலமைச்சர் சுஷில் குமார் மோடி காலமானார்!
  • தமிழ்நாட்டில் +1 பொதுத்தேர்வு முடிவுகள் வெளியானது.. 91.17% பேர் தேர்ச்சி..!
  • வள்ளுவரைப் பற்றிய அடிப்படை புரிதல் ஆளுநருக்கு இல்லை: கனிமொழி
  • தெலங்கானா முதலமைச்சராக பதவியேற்றார் ரேவந்த் ரெட்டி;
  • தமிழகத்தில் இயல்பை விட இந்த ஆண்டு, வடகிழக்கு பருவமழை குறைவு –
  • மிக்ஜாம் புயல்: தமிழ்நாட்டுக்கு ரூ.450 கோடி நிதி ஒதுக்கீடு!
  • மத்தியில் ஆட்சிக்கு வந்ததும் சாதிவாரி கணக்கெடுப்பை நடத்துவோம்-ராகுல் காந்தி

முன்னாள் அமைச்சரை யாரோ இயக்குகிறார்கள் – அமைச்சர் ஓ.எஸ். மணியன்

January 16, 2017 தண்டோரா குழு

“முன்னாள் அமைச்சர் கே.பி. முனுசாமியை யாரோ இயக்குகிறார்கள்: அவர் விலை போய்விட்டாரோ என்ற சந்தேகம் வந்துள்ளது“ என்று அமைச்சர் ஓ.எஸ். மணியன் புகார் கூறினார்.

செய்தியாளர்களிடம் அவர் பேசியதாவது:

அதிமுக வளர வேண்டும் என்பவர்கள் அனைவரும் கருத்து சொல்லலாம். எம்.ஜி,ஆரின் மறைவிற்குப் பிறகு அதிமுகவில் முக்கிய பங்கு வகித்தவர் திவாகரன். முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவிற்குப் பக்கப்பலமாக இருந்தவர் திவாகரனும் அவரது குழுவினரும்தான். எம்.ஜி.ஆரின் மறைவிற்குப் பின் அதிமுக அணி இரண்டுபட்டபோது ஜெயலலிதாவுக்கு ஆதரவாக திவாகரன் இருந்தார்.

அதைப் போல், ஜெயலலிதா மருத்துவமனையில் இருந்தபோது அவரைக் காப்பாற்ற சசிகலாவின் உறவினர்கள் பலரும் உதவினார்கள். மேலும், கே.பி. முனுசாமி கட்சி தாவ முடிவெடுத்து விட்டார் என்பது அவரது பேச்சின் மூலமாகத் தெரிகிறது. அவர் விலை போய்விட்டாரோ என்று தோன்றுகிறது. அவரை யாரோ பின்னால் இருந்து இயக்குகிறார்கள் என்று கூட சொல்லலாம்” என்றார் ஒய்.எஸ்.மணியன் கூறினார்.

முன்னாள் அமைச்சர் கே.பி. முனுசாமி சில தினங்களுக்கு முன், அதிமுகவை ஒரு குடும்பம் கைப்பற்ற முயல்வதாகவும், கட்சியில் அடிப்படை உறுப்பினராகக் கூட இல்லாதவர்கள் கட்சியைக் கைப்பற்றத் துடிப்பதாகவும் புகார் கூறியுள்ளார்.

மேலும் படிக்க