• Download mobile app
07 Sep 2026, MondayEdition - 3862
FLASH NEWS
  • தமிழக சட்டப்பேரவையில் காலியிடங்கள் 6 ஆக உயர்வு
  • யூதர்களின் நாட்டை அழிக்க ஈரான் முயற்சி – இஸ்ரேல் பிரதமர் நெதன்யாகு
  • “மக்களால் நிராகரிக்கப்பட்டவர் ஸ்டாலின்!” – செங்கோட்டையன்
  • எங்களை நீக்குவதற்கு இபிஎஸ்க்கு அதிகாரம் இல்லை.. – சி. வி.சண்முகம்
  • எஸ்.பி.வேலுமணி, சி.வி.சண்முகம் உள்ளிட்ட MLA-க்கள் பதவி பறிப்பு
  • ”நீட் தேர்வை முழுமையாக ரத்து செய்ய வேண்டும்”- முதல்வர் விஜய்
  • “மாணவர்கள் நடத்திய மொழிப்போரில் ஸ்டிக்கர் ஒட்டிக்கொண்டது திமுக”- பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ்
  • பிரவீன் சக்ரவர்த்தியின் கருத்து காங்கிரஸ் தலைமையின் கருத்து கிடையாது – கார்த்தி சிதம்பரம்
  • “ஜெயலலிதா அவர்களே என் ரோல் மாடல்” -பிரேமலதா விஜயகாந்த் பேட்டி
  • ராகுல் காந்தி கைது – தவெக தலைவர் விஜய் கண்டனம்
  • செத்து சாம்பல் ஆனாலும் தனித்துதான் போட்டி – சீமான்
  • பாகிஸ்தானின் அணு ஆயுத மிரட்டலுக்கு அஞ்சமாட்டோம் – இந்தியா
  • மத்திய ஆசிரியர் தகுதித் தேர்வு: பட்டதாரிகள் அக்.16 வரை விண்ணப்பிக்கலாம்

நண்பர்களுடன் மது அருந்தும் போது தகராறு : இளைஞர் கொலை நள்ளிரவில் பதற்றம்

April 18, 2023 தண்டோரா குழு

கோவை குனியமுத்தூர் பகுதியை சேர்ந்தவர் ரஹ்மத்துல்லா (30).இவர் பெயிண்டர் தொழில் செய்து வருகிறார்.ரஹ்மத்துல்லா கடந்த 10 நாட்களாக செல்வபுரம் பகுதியில் பெயிண்டிங் வேலை செய்து வருகிறார். இதனிடையே நேற்று இரவு பெயிண்டிங் வேலை முடித்துவிட்டு செல்வபுரம் அருகே உள்ள தில்லை நகர் பகுதியில் உள்ள ஒயின்ஷாப்பில் இவர் அவரது 3 நண்பர்களுடன் மது அருந்திக் கொண்டிருக்கும் போது, தகராறு ஏற்பட்டுள்ளது.

பார் உரிமையாளர் இவர்களை வெளியேற்றி உள்ளார்.நான்கு பேரும் தகராறில் ஈடுபட்டுள்ளனர். ஒருவரைப் ஒருவர் தாக்கி கொண்டனர்.இதில் இரண்டு பேர் தங்கள் வைத்திருந்த கத்தியால் ரஹ்மத்துல்லாவை குத்தியுள்ளனர்.சம்பவ இடத்தில் ரஹ்மத்துல்லா இறந்துவிட்டார்.

செல்வபுரம் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

மேலும் படிக்க