பெட்ரோல் விலை லிட்டருக்கு 42 காசும், டீசல் ரூ.1.03 உயர்ந்துள்ளன. சர்வதேச சந்தையில் கச்சா எண்ணெயின் விலை உயர்வதன் விளைவாக அரசு நடத்தும் எண்ணெய் நிறுவனங்கள் விலையை உயர்த்தியுள்ளன.இது திங்களன்று அமலுக்கு வந்தது.
பெட்ரோல், டீசல் விலை அந்தந்த மாநிலங்களின் வரிகளுக்கு ஏற்ப அமையும். நாட்டின் மிகப்பெரிய எரிபொருள் விற்பனையாளரான இந்தியன் ஆயில் கார்ப்பரேஷன் அதிகாரி கூறுகையில்,
“பெட்ரோல், டீசல் ஆகியவற்றின் சர்வதேச உற்பத்தி விலையின் அளவும், இந்திய ரூபாய்க்கு நிகரான அமெரிக்க டாலரின் விளையும் கணிசமாக உயர்ந்து வருவதையொட்டி இந்த விலை உயர்வு அமைகிறது. சர்வதேச எண்ணெய் சந்தையில் விலைகளின் இயக்கம் கூர்ந்து கவனிக்கப்படும். சந்தையில் வளரும் முறைகள் எதிர்கால விலை மாற்றங்களை பிரதிபலிக்கும்” என்றார்.
கடந்த ஆறு வாரங்களில் பெட்ரோல் விலை நான்கு முறையும், டீசல் விலை ஒரு மாதத்தில் மூன்று முறையும் உயர்த்தப்பட்டிருப்பது குறிப்பிடத்தக்கது.
கோவை மாவட்டத்தில் மக்கள் குறைதீர்க்கும் முகாம் – 45 மனுக்கள் மீது சுமூகமான தீர்வு
கோவையில் அன்னையர் நினைவாக, தாய்மையை போற்றும் விதமாக தாய் – சேய் சிலை திறப்பு
தமிழ்நாட்டில் தனது மூன்று சக்கர மின்சார வாகனமான டிவிஎஸ் கிங் இவி மேக்ஸ் – டிவிஎஸ் மோட்டார் அறிமுகம்
கோவையில் தனிஷ்க் ஜுவல்லரியின் பிரம்மாண்ட காதணி கண்காட்சி திருவிழா துவக்கம்
கோவையில் ஜூன் 10ல் 1008 திருவிளக்கு திருவிழா – 51 மகளிருக்கு “மகாசக்தி” விருது
ஈஷா மண் காப்போம் இயக்கத்தின் தன்னார்வலருக்கு ஐநா-வில் பொறுப்பு