• Download mobile app
09 Apr 2026, ThursdayEdition - 3711
FLASH NEWS
  • “மாணவர்கள் நடத்திய மொழிப்போரில் ஸ்டிக்கர் ஒட்டிக்கொண்டது திமுக”- பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ்
  • பிரவீன் சக்ரவர்த்தியின் கருத்து காங்கிரஸ் தலைமையின் கருத்து கிடையாது – கார்த்தி சிதம்பரம்
  • ராகுல்காந்தியின் போராட்டத்திற்கு தோள் நிற்போம் – முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்
  • “ஜெயலலிதா அவர்களே என் ரோல் மாடல்” -பிரேமலதா விஜயகாந்த் பேட்டி
  • ராகுல் காந்தி கைது – தவெக தலைவர் விஜய் கண்டனம்
  • செத்து சாம்பல் ஆனாலும் தனித்துதான் போட்டி – சீமான்
  • பாகிஸ்தானின் அணு ஆயுத மிரட்டலுக்கு அஞ்சமாட்டோம் – இந்தியா
  • மத்திய ஆசிரியர் தகுதித் தேர்வு: பட்டதாரிகள் அக்.16 வரை விண்ணப்பிக்கலாம்

கோவையில் பெய்த திடீர் மழையால் சாலைகளில் வெள்ளம் -வெள்ளத்தில் தத்தளித்தப்படி சென்ற வாகனங்கள்

April 4, 2023 தண்டோரா குழு

கோவை மாவட்டத்தில் தொண்டாமுத்தூர், பெரியநாயக்கன்பாளையம், நரசிம்மநாயக்கன்பாளையம், மேட்டுப்பாளையம், சிங்காநல்லூர் உள்ளிட்ட பகுதிகளிலும் மாநகரில் உக்கடம், டவுன்ஹால், கலெக்டர் அலுவலகம் அருகில், அவினாசி சாலை, திருச்சி சாலை கணபதி உள்ளிட்ட பல்வேறு இடங்களிலும் திடீரென இன்று மாலை பலத்த காற்றுடன் மழை பெய்தது. சுமார் அரை மணி நேரம் பெய்த மழையால் சாலையில் தண்ணீர் தேங்கியது. மழைநீர் வடிகால் அனைத்தும் நிரம்பி சாக்கடைகள் நிரம்பி மழை நீருடன் சாக்கடை கலந்து சாலையில், தெருக்களில் ஓடியது.

இதனிடையே கலெக்டர் அலுவலகத்தின் வளாகத்தின் உள்ளே உள்ள மூங்கில் மரம் ஒன்று சாய்ந்தது. இதே போல் சாலையோரம் உள்ள மர கிளைகள் உடைந்து விழுந்தன.அவினாசி சாலையில் தேங்கிய மழை நீரால் அப்பகுதி வெள்ளம் போல் காட்சி அளித்தது. வாகனங்கள் வெள்ளத்தில் தத்தளித்தபடி சென்றன.திடீரென பெய்த மழையால் உருவான வெள்ளத்தில் வாகனங்கள் தத்தளித்து சென்றதால், வாகன ஓட்டிகள் மிகுந்த அச்சமடைந்தனர். அவிநாசி மேம்பாலத்தின் கீழ் பகுதிகளும் தண்ணீர் சூழ்ந்து போக்குவரத்து நிறுத்தப்பட்டது.

ஊரகப் பகுதியில் பெய்த மழை காரணமாக விவசாய நிலங்களுக்கு தண்ணீர் கிடைத்துள்ளது.அதே சமயம் மாநகர் பகுதியில் மழை காரணமாக வீடுகளுக்குள் சாக்கடை நீர் புகுந்தது.குறிப்பாக சிங்காநல்லூர் வரதராஜபுரம், கிருஷ்ண்ணம்ம நாயக்கர் லேஅவுட் பகுதியில் கனமழை காரணமாக வீடுகளுக்குள் சாக்கடை கழிவு நீர் புகுந்தது. இதனால் மக்கள் அவதியடைந்தனர்.

மேலும் படிக்க