• Download mobile app
10 Sep 2025, WednesdayEdition - 3500
FLASH NEWS
  • ராகுல்காந்தியின் போராட்டத்திற்கு தோள் நிற்போம் – முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்
  • “ஜெயலலிதா அவர்களே என் ரோல் மாடல்” -பிரேமலதா விஜயகாந்த் பேட்டி
  • ராகுல் காந்தி கைது – தவெக தலைவர் விஜய் கண்டனம்
  • செத்து சாம்பல் ஆனாலும் தனித்துதான் போட்டி – சீமான்
  • பாகிஸ்தானின் அணு ஆயுத மிரட்டலுக்கு அஞ்சமாட்டோம் – இந்தியா
  • மத்திய ஆசிரியர் தகுதித் தேர்வு: பட்டதாரிகள் அக்.16 வரை விண்ணப்பிக்கலாம்

கலைகளுக்கும், பண்பாட்டுக்கும் அதிக முக்கியத்துவம் அளிக்கும் தமிழக அரசு – ஆட்சியர் பேச்சு

March 29, 2023 தண்டோரா குழு

கோவையில் தமிழக அரசு இசைக்கல்லூரியில் கலைபண்பாட்டுத்துறை சார்பில் தமிழிசை விழாவினை ஆட்சியர் கிராந்திகுமார் பாடி தொடங்கி வைத்தார். இவ்விழாவில் மண்டல கலை பண்பாட்டு மைய உதவி இயக்குநர் வ.கோபாலகிருஷ்ணன், தமிழக அரசு இசைக்கல்லூரி முதல்வர் (பொ) ஏ.வி.எஸ்.சிவக்குமார் ஆகியோர் கலந்துகொண்டனர்.

இவ்விழாவில் வண்ணாமடை ஆர்.டி.ஜெயபாலன், நஞ்சைகவுண்டர் புதூர் ஏ.பார்த்திபன், கோட்டூர் என்.ஜெயப்பிரகாஷ், சரவடி ஜி.பிரகாஷ் ஆகியோரின் நாதஸ்வரம் தவில் இசையும், மைதிலி கிருஷ்ணன் (வீணை), எஸ்.சபரீஸ்வரன் (மிருதங்கம்), பொன்னாபுரம் ஆர்.தர்மராஜ் (கஞ்சிரா) ஆகியோரின் வீணை இசையும் நடைபெற்றதை ஆட்சியர் பார்வையிட்டார்.

இந்நிகழ்ச்சியில் ஆட்சியர் பேசியதாவது:

ஒரு சமூகத்தில் உள்ள கலைகளை பொறுத்துதான் அந்த சமூகத்தின் கலாசார வளர்ச்சியை அறிய முடியும். தமிழ்நாட்டின் கலாச்சாரத்தில் பல்வேறு கலைகள் காலந்தோறும் சிறப்பாக வளர்ச்சி அடைந்துள்ளன. தொன்று தொட்டு விளங்கக்கூடிய தமிழிசையில் தேவாரம், திருவாசகம், திருப்புகழ், பாசுரங்கள் திருவாய்மொழி தமிழிசை மூவரின் பாடல்கள் மிக முக்கிய பங்களித்து தமிழிசை விளங்குகின்றது.

தமிழக அரசு தமிழ்நாட்டின் கலைகளுக்கும் பண்பாட்டுக்கும் அதிக முக்கியத்துவம் அளித்து வருகின்றது. கலைகளில் மாணவர்கள் சிறந்து விளங்கும் வகையில் அரசு இசை கல்லூரிகளின் மூலம் பல்வேறு பாடப்பிரிவுகளில் கலைகளை மாணவர்களுக்கு சிறந்த முறையில் கற்பித்து வருகின்றன. சிறுவயதில் எந்த கலைகளில் திறமை உள்ளது என்பதை கண்டறிந்து, அக்கலைகளின் மீதான ஆர்வம் காரணமாகவும், தங்கள் திறமைகளை மேலும் வளர்க்கும் விதமாக, இசை கல்லூரிகளில் சேர்ந்து உயர் படிப்பு கற்கின்றார்கள். அரசும் அவர்களை பல்வேறு வகையில் ஊக்கமளித்து வருகின்றது.
இந்த வாய்ப்புக்களை மாணவர்கள் பயன்படுத்தி மேலும் உத்வேகத்துடன் திறமைகளை வளர்த்து இசை கலைகளில் சிறந்தவர்களாக வளரவேண்டும்..

இவ்வாறு அவர் பேசினார்.

மேலும் படிக்க