• Download mobile app
17 Nov 2025, MondayEdition - 3568
FLASH NEWS
  • ராகுல்காந்தியின் போராட்டத்திற்கு தோள் நிற்போம் – முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்
  • “ஜெயலலிதா அவர்களே என் ரோல் மாடல்” -பிரேமலதா விஜயகாந்த் பேட்டி
  • ராகுல் காந்தி கைது – தவெக தலைவர் விஜய் கண்டனம்
  • செத்து சாம்பல் ஆனாலும் தனித்துதான் போட்டி – சீமான்
  • பாகிஸ்தானின் அணு ஆயுத மிரட்டலுக்கு அஞ்சமாட்டோம் – இந்தியா
  • மத்திய ஆசிரியர் தகுதித் தேர்வு: பட்டதாரிகள் அக்.16 வரை விண்ணப்பிக்கலாம்

கரிமவளம் நிறைந்த மண்ணால்தான் நதிகளில் நீரோடச் செய்திட முடியும் – சத்குரு டிவீட்

March 15, 2023 தண்டோரா குழு

சர்வதேச நதிகள் அமைப்பு “சர்வதேச நதிகள் பாதுகாப்பிற்கான நடவடிக்கைகள் தினத்தை” (International Day of Action for Rivers) ஆண்டுதோறும் மார்ச் 14 ஆம் தேதி கொண்டாடி வருகிறது.

அந்த வகையில் இந்தாண்டு சர்வதேச நதிகள் பாதுகாப்பிற்கான நடவடிக்கைகள் தினம் இன்று கொண்டாடப்பட்டு வருகிறது. இது குறித்து சத்குரு அவர்கள் தனது ட்விட்டர் பக்கத்தில் பதிவொன்றை பதிவிட்டுள்ளார்.

அதில் அவர் குறிபிட்டுள்ளதாவது

“கரிமவளம் நிறைந்த மண்ணால்தான் மழைநீரை உறிஞ்சி, நிலத்தடி நீர்மட்டத்தை உயர்த்தி, நதிகளில் நீரோடச் செய்திட முடியும்; வளமிழந்த மண்ணால் தண்ணீரை உறிஞ்சவோ, சேர்க்கவோ முடியாது, எனவே நதிகளில் வெள்ளப்பெருக்கு ஏற்படும் அல்லது வறண்டுவிடும். மண்காப்போம், நதிகளை காப்போம்.”

இவ்வாறு அவர் குறிபிட்டுள்ளார்.

மேலும் படிக்க