• Download mobile app
15 Feb 2026, SundayEdition - 3658
FLASH NEWS
  • ராகுல்காந்தியின் போராட்டத்திற்கு தோள் நிற்போம் – முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்
  • “ஜெயலலிதா அவர்களே என் ரோல் மாடல்” -பிரேமலதா விஜயகாந்த் பேட்டி
  • ராகுல் காந்தி கைது – தவெக தலைவர் விஜய் கண்டனம்
  • செத்து சாம்பல் ஆனாலும் தனித்துதான் போட்டி – சீமான்
  • பாகிஸ்தானின் அணு ஆயுத மிரட்டலுக்கு அஞ்சமாட்டோம் – இந்தியா
  • மத்திய ஆசிரியர் தகுதித் தேர்வு: பட்டதாரிகள் அக்.16 வரை விண்ணப்பிக்கலாம்

கோவையில் 4.5 கிலோ கஞ்சா பறிமுதல் – வட மாநில இளைஞர் கைது

February 28, 2023 தண்டோரா குழு

போதைப்பொருட்களின் பயன்பாட்டை முற்றிலும்ஒழிக்கும் பொருட்டு கோயம்புத்தூர் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் பத்ரிநாராயணன் செயல்பட்டு வருகிறார். அதன் அடிப்படையில் கருமத்தம்பட்டி பகுதியில் (சரவணபவன் ஹோட்டல் அருகில்) கஞ்சா விற்பனைக்காக பதுக்கி வைத்திருப்பதாக பெரியநாயக்கன்பாளையம்
மதுவிலக்கு அமலாக்க காவல் உதவி ஆய்வாளருக்கு ரகசிய தகவல் கிடைத்தது.

கருமத்தம்பட்டி பகுதிக்கு காவல்துறையினர் விரைந்து சென்று சோதனை மேற்கொண்டனர். அப்போது விற்பனைக்காக கஞ்சாவை வைத்திருந்த ஒடிசா மாநிலத்தை சேர்ந்த மணிநந்தர் மகாநந்தா (32) என்பவரை போலீசார் கைது செய்து அவரிடமிருந்து ரூ.2,00,000 மதிப்புள்ள 4.5 கிலோ கஞ்சாவை பறிமுதல் செய்தனர். இதையடுத்து அவரை நீதிமன்ற காவலுக்கு உட்படுத்தினர்.

மேலும் படிக்க