• Download mobile app
16 Nov 2025, SundayEdition - 3567
FLASH NEWS
  • ராகுல்காந்தியின் போராட்டத்திற்கு தோள் நிற்போம் – முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்
  • “ஜெயலலிதா அவர்களே என் ரோல் மாடல்” -பிரேமலதா விஜயகாந்த் பேட்டி
  • ராகுல் காந்தி கைது – தவெக தலைவர் விஜய் கண்டனம்
  • செத்து சாம்பல் ஆனாலும் தனித்துதான் போட்டி – சீமான்
  • பாகிஸ்தானின் அணு ஆயுத மிரட்டலுக்கு அஞ்சமாட்டோம் – இந்தியா
  • மத்திய ஆசிரியர் தகுதித் தேர்வு: பட்டதாரிகள் அக்.16 வரை விண்ணப்பிக்கலாம்

தன்னை குடும்பத்தோடு சேர்த்து கருணை கொலை செய்து விடுங்கள் ஆட்சியரிடம் மனு

February 27, 2023 தண்டோரா குழு

தனது உயில் சார்ந்த விவசாய பூமி சொத்திற்கும், தனது உயிருக்கும் பாதுகாப்பு ஏற்படுத்தி தராவிட்டால் தன்னை குடும்பத்தோடு சேர்த்து கருணை கொலை செய்து விடுங்கள் எனக் கோரி காளியம்மாள் என்பவர்‌ மாவட்ட ஆட்சியரிடம் புகார் மனு அளிக்க வந்ததால் பரபரப்பு நிலவியது.

பேரூர் நரசி புரத்தைச் சேர்ந்த காளியம்மாள் என்பவர் ஏழு ஆண்டுகளாக அவரது உயில் சார்ந்த விவசாய பூமி சொத்து மற்றும் உயிருக்கு வழங்க கோரி பலமுறை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் புகார் மனு அளித்ததாக கூறப்படுகிறது. மேலும் தனது விவசாய பூமி சொத்தை கூட்டு சதி செய்து மோசடி செய்த நபர்கள் மீது முதல் தகவல் அறிக்கை பதிவு செய்து வழக்குப்பதிய கூறி தமிழக அரசின் தலைமைச் செயலாளர், உள்துறை செயலாளர், ஆளுநர் உள்ளிட்ட பலருக்கு அனுப்பி வைத்தும் எவ்வித பலனும் இல்லாததால் தன்னை குடும்பத்துடன் கருணை கொலை செய்ய உத்தரவிட வேண்டி அவர் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்துக்கு புகார் மனு அளிக்க வந்திருந்தார்.

சங்கு ஊதி கருணை கொலை செய்ய வேண்டி அவர் கோரிக்கை மனு கொண்டு வந்திருந்ததால் அப்பகுதியில் சிறிது நேரம் பரபரப்பு நிலவியது.

மேலும் படிக்க