• Download mobile app
28 Jul 2025, MondayEdition - 3456
FLASH NEWS
  • அமைச்சர் உதயநிதி துணை முதல்வராவதற்கு காத்திருக்கிறேன் – சபாநாயகர் அப்பாவு
  • தமிழ்நாட்டில் 11 இடங்களில் 100 டிகிரி ஃபாரன்ஹீட்க்கு மேல் வெயில் பதிவு!
  • “சந்திரபாபு நாயுடு கூறும் அனைத்துமே கட்டுக்கதைகள்” – ஜெகன் மோகன் ரெட்டி
  • மத்திய ஆசிரியர் தகுதித் தேர்வு: பட்டதாரிகள் அக்.16 வரை விண்ணப்பிக்கலாம்
  • பீகார் முன்னாள் துணை முதலமைச்சர் சுஷில் குமார் மோடி காலமானார்!
  • தமிழ்நாட்டில் +1 பொதுத்தேர்வு முடிவுகள் வெளியானது.. 91.17% பேர் தேர்ச்சி..!
  • வள்ளுவரைப் பற்றிய அடிப்படை புரிதல் ஆளுநருக்கு இல்லை: கனிமொழி
  • தெலங்கானா முதலமைச்சராக பதவியேற்றார் ரேவந்த் ரெட்டி;
  • தமிழகத்தில் இயல்பை விட இந்த ஆண்டு, வடகிழக்கு பருவமழை குறைவு –
  • மிக்ஜாம் புயல்: தமிழ்நாட்டுக்கு ரூ.450 கோடி நிதி ஒதுக்கீடு!
  • மத்தியில் ஆட்சிக்கு வந்ததும் சாதிவாரி கணக்கெடுப்பை நடத்துவோம்-ராகுல் காந்தி

மாவுத்தம்பதி ஆலமர முனியப்பசாமி கோவில் சிவராத்திரி விழா

February 20, 2023 தண்டோரா குழு

மாவுத்தம்பதி ஆலமர முனியப்பசாமி கோவில் மகா சிவராத்திரி விழா வெகு விமரிசையாக நடைபெற்றது.

கோவையில் ஆதி தமிழர்களால் வணங்கப்பட்டு வந்த கேரள,தமிழக எல்லையில் உள்ள பழமை வாய்ந்த ஆலமர முனியப்பசாமி கோவிலில் நடைபெற்ற சிவராத்திரி விழாவில் பெண்கள் குழந்தைகள் வள்ளிகும்மி ஆடி அசத்தினர். கோவையில் பண்டைய சேர,சோழ,பாண்டிய அரசுகளுக்கு யானைகளை போர் முறைகளுக்கு பழக்கி வழங்கும் வரலாற்றை கொண்ட மாவுத்தம்பதி கோவை,கேரள எல்லை மலை கிராமத்தில் அமைந்துள்ளது.ஆலமர முனியப்பசாமி கோவில்,தமிழக, கேரள எல்லையில் அமைந்துள்ள இக்கோவிலில் நடைபெற்ற ஆண்டு மகாசிவராத்திரி விழாவை கிராம மக்கள் இணைந்து கொண்டாடினர்.

விழாவை முன்னிட்டு,பழங்கால மக்களின் உணவு மற்றும் வாழ்க்கை வழிமுறைகளை போற்றும் விதமாக பண்டைய பூஜை செய்வதை வழக்கமாக கொண்டுள்ளனர்.இதனை தொடர்ந்து சுமார் நூறுக்கும் மேற்பட்ட கிடாய்களை வெட்டி விருந்து படைக்கும் நிகழ்ச்சியில் நான்காயிரத்திற்கும் மேற்பட்டோர் கலந்து கொண்டனர்.விழாவையொட்டி முன்னதாக நடைபெற்ற நவீன் பிரபஞ்ச குழுவினரின் வள்ளி கும்மியில் சிறுவயது குழந்தைகள், பெண்கள் என நடனமாடி அசத்தினர்.இதில் மாவுத்தம்பதி,சின்னம்பதி,முருகம்பதி என உள்ளிட்ட பல்வேறு சுற்றுவட்டார கிராமங்களை சேர்ந்தோர் கலந்து கொண்டனர்.

மேலும் படிக்க