• Download mobile app
01 Mar 2026, SundayEdition - 3672
FLASH NEWS
  • “மாணவர்கள் நடத்திய மொழிப்போரில் ஸ்டிக்கர் ஒட்டிக்கொண்டது திமுக”- பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ்
  • பிரவீன் சக்ரவர்த்தியின் கருத்து காங்கிரஸ் தலைமையின் கருத்து கிடையாது – கார்த்தி சிதம்பரம்
  • ராகுல்காந்தியின் போராட்டத்திற்கு தோள் நிற்போம் – முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்
  • “ஜெயலலிதா அவர்களே என் ரோல் மாடல்” -பிரேமலதா விஜயகாந்த் பேட்டி
  • ராகுல் காந்தி கைது – தவெக தலைவர் விஜய் கண்டனம்
  • செத்து சாம்பல் ஆனாலும் தனித்துதான் போட்டி – சீமான்
  • பாகிஸ்தானின் அணு ஆயுத மிரட்டலுக்கு அஞ்சமாட்டோம் – இந்தியா
  • மத்திய ஆசிரியர் தகுதித் தேர்வு: பட்டதாரிகள் அக்.16 வரை விண்ணப்பிக்கலாம்

ஆப்கானிஸ்தானில் குண்டுவெடிப்பு, 9 பேர் பலி

January 11, 2017 தண்டோரா குழு

ஆப்கானிஸ்தான் நாட்டின் தெற்குப் பகுதியில் உள்ள காந்தஹார் மாகாணத்தில் ஆளுநர் வீட்டின் அருகில் நிகழ்ந்த குண்டுவெடிப்புச் சம்பவத்தில் 9 பேர் உயிரிழந்தனர். 16 பேர் காயமடைந்துள்ளனர்.

இச்சம்பவம் குறித்து ஐக்கிய அரபு நாட்டின் வெளியுறவுத் துறை அமைச்சர் செய்தியாளர்களிடம் செவ்வாய்க்கிழமை (ஜனவரி 1௦) கூறியதாவது:

ஆப்கானிஸ்தான் நாட்டின் தெற்கு பகுதியில் உள்ள காந்தஹார் மாகாணத்தில் உள்ள ஆளுநர் வீட்டின் அருகில் செவ்வாய்க்கிழமை சக்திவாய்ந்த வெடிகுண்டு வெடித்தது.

இந்தl் தாக்குதலில் ஐக்கிய அரபு நாட்டின் தூதர் ஜும்மா முஹம்மத் அப்துல்லா அல் கஃபி மற்றும் அவருடன் வந்திருந்த ஐக்கிய அரபு நாட்டின் தூதரக அதிகாரிகள் காயமடைந்துள்ளனர். காயமடைந்த 16 பேர் அருகிலுள்ள மருத்துவமனையில் சேர்க்கப்பட்டுள்ளனர். அவர்களுக்கு மருத்துவர்கள் சிகிச்சை அளித்து வருகின்றனர்.

இந்த வெடிகுண்டு சம்பவம் சர்வதேச அளவில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.இவ்வாறு அவர் தெரிவித்தார்.

மேலும் படிக்க