• Download mobile app
31 Aug 2026, MondayEdition - 3855
FLASH NEWS
  • தமிழக சட்டப்பேரவையில் காலியிடங்கள் 6 ஆக உயர்வு
  • யூதர்களின் நாட்டை அழிக்க ஈரான் முயற்சி – இஸ்ரேல் பிரதமர் நெதன்யாகு
  • “மக்களால் நிராகரிக்கப்பட்டவர் ஸ்டாலின்!” – செங்கோட்டையன்
  • எங்களை நீக்குவதற்கு இபிஎஸ்க்கு அதிகாரம் இல்லை.. – சி. வி.சண்முகம்
  • எஸ்.பி.வேலுமணி, சி.வி.சண்முகம் உள்ளிட்ட MLA-க்கள் பதவி பறிப்பு
  • ”நீட் தேர்வை முழுமையாக ரத்து செய்ய வேண்டும்”- முதல்வர் விஜய்
  • “மாணவர்கள் நடத்திய மொழிப்போரில் ஸ்டிக்கர் ஒட்டிக்கொண்டது திமுக”- பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ்
  • பிரவீன் சக்ரவர்த்தியின் கருத்து காங்கிரஸ் தலைமையின் கருத்து கிடையாது – கார்த்தி சிதம்பரம்
  • “ஜெயலலிதா அவர்களே என் ரோல் மாடல்” -பிரேமலதா விஜயகாந்த் பேட்டி
  • ராகுல் காந்தி கைது – தவெக தலைவர் விஜய் கண்டனம்
  • செத்து சாம்பல் ஆனாலும் தனித்துதான் போட்டி – சீமான்
  • பாகிஸ்தானின் அணு ஆயுத மிரட்டலுக்கு அஞ்சமாட்டோம் – இந்தியா
  • மத்திய ஆசிரியர் தகுதித் தேர்வு: பட்டதாரிகள் அக்.16 வரை விண்ணப்பிக்கலாம்

ஆப்கானிஸ்தானில் குண்டுவெடிப்பு, 9 பேர் பலி

January 11, 2017 தண்டோரா குழு

ஆப்கானிஸ்தான் நாட்டின் தெற்குப் பகுதியில் உள்ள காந்தஹார் மாகாணத்தில் ஆளுநர் வீட்டின் அருகில் நிகழ்ந்த குண்டுவெடிப்புச் சம்பவத்தில் 9 பேர் உயிரிழந்தனர். 16 பேர் காயமடைந்துள்ளனர்.

இச்சம்பவம் குறித்து ஐக்கிய அரபு நாட்டின் வெளியுறவுத் துறை அமைச்சர் செய்தியாளர்களிடம் செவ்வாய்க்கிழமை (ஜனவரி 1௦) கூறியதாவது:

ஆப்கானிஸ்தான் நாட்டின் தெற்கு பகுதியில் உள்ள காந்தஹார் மாகாணத்தில் உள்ள ஆளுநர் வீட்டின் அருகில் செவ்வாய்க்கிழமை சக்திவாய்ந்த வெடிகுண்டு வெடித்தது.

இந்தl் தாக்குதலில் ஐக்கிய அரபு நாட்டின் தூதர் ஜும்மா முஹம்மத் அப்துல்லா அல் கஃபி மற்றும் அவருடன் வந்திருந்த ஐக்கிய அரபு நாட்டின் தூதரக அதிகாரிகள் காயமடைந்துள்ளனர். காயமடைந்த 16 பேர் அருகிலுள்ள மருத்துவமனையில் சேர்க்கப்பட்டுள்ளனர். அவர்களுக்கு மருத்துவர்கள் சிகிச்சை அளித்து வருகின்றனர்.

இந்த வெடிகுண்டு சம்பவம் சர்வதேச அளவில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.இவ்வாறு அவர் தெரிவித்தார்.

மேலும் படிக்க