• Download mobile app
10 Sep 2025, WednesdayEdition - 3500
FLASH NEWS
  • ராகுல்காந்தியின் போராட்டத்திற்கு தோள் நிற்போம் – முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்
  • “ஜெயலலிதா அவர்களே என் ரோல் மாடல்” -பிரேமலதா விஜயகாந்த் பேட்டி
  • ராகுல் காந்தி கைது – தவெக தலைவர் விஜய் கண்டனம்
  • செத்து சாம்பல் ஆனாலும் தனித்துதான் போட்டி – சீமான்
  • பாகிஸ்தானின் அணு ஆயுத மிரட்டலுக்கு அஞ்சமாட்டோம் – இந்தியா
  • மத்திய ஆசிரியர் தகுதித் தேர்வு: பட்டதாரிகள் அக்.16 வரை விண்ணப்பிக்கலாம்

கோவையில் இருந்து இயக்கப்படும் மதுரை, நாகர்கோவில் ரயில்கள் பகுதியாக ரத்து

February 8, 2023 தண்டோரா குழு

மதுரை – திருமங்கலம் ரயில் நிலையங்கள் இடையே பொறியியல் பராமரிப்புப் பணிகள் மேற்கொள்ளப்படுவதால், கோவையில் இருந்து மதுரை, நாகர்கோவிலுக்கு இயக்கப்படும் ரயில்கள் பகுதியாக ரத்து செய்யப்படுவதாக ரயில்வே நிர்வாகம் சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதுதொடர்பாக, சேலம் ரயில்வே கோட்ட நிர்வாகம் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில்

பொறியியல் பராமரிப்பு பணி காரணமாக பிப்ரவரி 9ஆம் தேதி முதல் மார்ச் 6ஆம் தேதி வரை நாகர்கோவில் – கோவை ரயில் விருதுநகர் – கோவை இடையே பகுதியாக ரத்து செய்யப்படுகிறது. இந்த நாள்களில் நாகர்கோவில் – விருதுநகர் இடையே மட்டுமே இந்த ரயில் இயக்கப்படும். பிப்ரவரி 9ஆம் தேதி முதல் மார்ச் 6ஆம் தேதி வரை கோவை – நாகர்கோவில் ரயில், கோவை – விருதுநகர் இடையே பகுதியாக ரத்து செய்யப்படுகிறது. இந்த நாள்களில் விருதுநகர் – நாகர்கோவில் இடையே மட்டுமே இயக்கப்படும்.

பிப்ரவரி 9ஆம் தேதி முதல் மார்ச் 4ஆம் தேதி வரை கோவையில் இருந்து பிற்பகல் 2.40 மணிக்கு புறப்படும் கோவை – மதுரை தினசரி ரயில் பிப்ரவரி 9ஆம் தேதி முதல் மார்ச் 4ஆம் தேதி வரை திண்டுக்கல் – மதுரை இடையே ரத்து செய்யப்படுகிறது. இந்த நாள்களில், கோவை – திண்டுக்கல் இடையே இந்த ரயில் இயக்கப்படும். பிப்ரவரி 9ஆம் தேதி முதல் மார்ச் 5ஆம் தேதி வரை மதுரை – கோவை தினசரி ரயில் மதுரை – திண்டுக்கல் இடையே பகுதியாக ரத்து செய்யப்படுகிறது.

திண்டுக்கல் – கோவை இடையே மட்டும் இந்த ரயில் இயக்கப்படும் என அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

மேலும் படிக்க