• Download mobile app
16 Nov 2025, SundayEdition - 3567
FLASH NEWS
  • ராகுல்காந்தியின் போராட்டத்திற்கு தோள் நிற்போம் – முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்
  • “ஜெயலலிதா அவர்களே என் ரோல் மாடல்” -பிரேமலதா விஜயகாந்த் பேட்டி
  • ராகுல் காந்தி கைது – தவெக தலைவர் விஜய் கண்டனம்
  • செத்து சாம்பல் ஆனாலும் தனித்துதான் போட்டி – சீமான்
  • பாகிஸ்தானின் அணு ஆயுத மிரட்டலுக்கு அஞ்சமாட்டோம் – இந்தியா
  • மத்திய ஆசிரியர் தகுதித் தேர்வு: பட்டதாரிகள் அக்.16 வரை விண்ணப்பிக்கலாம்

இருகூர் அருள்மிகு தங்க நாகம்மாள் திருக்கோவில் கும்பாபிஷேக பெருவிழா

February 5, 2023 தண்டோரா குழு

கோவை அடுத்த இருகூர் உதயம் நகரில் புதிதாக கட்டப்பட்டுள்ள தங்க நாகம்மாள் திருக்கோவில் மகா கும்பாபிஷேக பெருவிழா சிறப்பாக நடைபெற்றது. இந்த திருக்கோவிலில் தங்க நாகம்மாள், நாக கணபதி, குழு மாயி அம்மன், சேதுபகவான், வெற்றி விநாயகர், ராகு கேது சகிதம், பேச்சியம்மாள், வீரமாத்தி அம்மன், அங்காளம்மன், வாராஹி அம்மன், தன்வந்திரி, பெருமாள், ராஜகாளியம்மன், இசக்கி அம்மன், நீலி அம்மன், சிவன் பார்வதி குடும்பசகிதம், ரேணுகா தேவி, ஆதிபராசக்தி அம்மன், சேவகராஜா, தசநாகம் நாகப்பரிவாரங்கள், சுயம்பு பிள்ளையார், சீரடி சாய்பாபா, கல்கத்தா காளியம்மன், பரமஹம்சர், சாரதா தேவி, காலபைரவர் உள்ளிட்ட அனைத்து விதமான தெய்வங்களும் பிரதிஷ்டை செய்யப்பட்டுள்ளது.

இந்த திருக்கோவில் கும்பாபிஷேகத்தை சிவ ஸ்ரீ சிவசுப்பிரமணியம் பரமேஸ்வர பண்டித குரு சுவாமிகள் தலைமையேற்று சிறப்பாக நடத்தி வைத்தார். இந்த கும்பாபிஷேக பெருவிழாவில் ஏராளமான பொதுமக்கள் கலந்து கொண்டு தங்க நாகம்மாளை தரிசனம் செய்தனர். கும்பாபிஷேக பெருவிழாவிற்கு வந்திருந்த அனைத்து பொது மக்களுக்கும் கோவில் நிர்வாகி தங்கம்மாள் குடும்பத்தினர் சார்பில் மாபெரும் அன்னதானம் வழங்கப்பட்டது.

மேலும் படிக்க