• Download mobile app
29 Apr 2024, MondayEdition - 3001
FLASH NEWS
  • வள்ளுவரைப் பற்றிய அடிப்படை புரிதல் ஆளுநருக்கு இல்லை: கனிமொழி
  • தெலங்கானா முதலமைச்சராக பதவியேற்றார் ரேவந்த் ரெட்டி;
  • தமிழகத்தில் இயல்பை விட இந்த ஆண்டு, வடகிழக்கு பருவமழை குறைவு –
  • மிக்ஜாம் புயல்: தமிழ்நாட்டுக்கு ரூ.450 கோடி நிதி ஒதுக்கீடு!
  • மத்தியில் ஆட்சிக்கு வந்ததும் சாதிவாரி கணக்கெடுப்பை நடத்துவோம்-ராகுல் காந்தி

கோவையில் போஸ்டர் கலாச்சாரத்தை ஒழிக்கும் விதமாக மேம்பாலம் தூண்களில் வண்ண ஒவியங்கள்

February 3, 2023 தண்டோரா குழு

கோவை மாநகராட்சியில் போஸ்டர் கலாச்சாரத்தை ஒழிக்கும் விதமாக மேம்பாலம் தூண்களில் வண்ண ஒவியங்கள் வரையப்பட்டு வருகிறது.

கோவையில் சமீபகாலமாக போஸ்டர் கலாச்சாரம் என்பது அதிகரித்து வருகிறது.குறிப்பாக பொதுமக்கள் முகம் சுளிக்கும் வகையில் கோவை மாநகராட்சிக்கு சொந்தமான பாலங்கள், சுவர்களில் சுவரொட்டிகள் ஒட்டப்பட்டு வந்தது. பலமுறை சுவரொட்டிகள் ஒட்டப்படுவோர்கள் மீது நடவடிக்கை எடுக்கப்படும் என மாநகராட்சி தரப்பில் அறிக்கைகள் கொடுக்கப்பட்டாலும் பல்வேறு அரசியல் கட்சியினர் தொடர்ந்து போஸ்டர்கள் ஒட்டப்பட்டு வந்தனர்.

இந்நிலையில் மாநகராட்சியில் போஸ்டர் கலாச்சாரத்தை ஒழித்து தூய்மையான மாநகராட்சியை உருவாக்கும் விதமாகவும், அலகுபடுத்தும் விதமாகவும் கோவை காந்திபுரம் பகுதியில் உள்ள சுமார்40க்கும் மேற்பட்ட மேம்பால தூண்களில் உள்ள போஸ்டர்களை அகற்றி வண்ண ஓவியங்களை வரையும் பணியை துவக்கியுள்ளனர். குறிப்பாக இயற்கை சார்ந்த ஓவியங்கள்,பொற்கால ஒவியங்கள், சுதந்திர போராட்ட தியாகிகளின் புகைப்படம், தமிழகத்தின் வரலாற்று மிக்க திருக்கோயில்களின் ஓவியங்கள் என வரையப்பட்டு வருகிறது.

மேலும் படிக்க