• Download mobile app
16 Nov 2025, SundayEdition - 3567
FLASH NEWS
  • ராகுல்காந்தியின் போராட்டத்திற்கு தோள் நிற்போம் – முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்
  • “ஜெயலலிதா அவர்களே என் ரோல் மாடல்” -பிரேமலதா விஜயகாந்த் பேட்டி
  • ராகுல் காந்தி கைது – தவெக தலைவர் விஜய் கண்டனம்
  • செத்து சாம்பல் ஆனாலும் தனித்துதான் போட்டி – சீமான்
  • பாகிஸ்தானின் அணு ஆயுத மிரட்டலுக்கு அஞ்சமாட்டோம் – இந்தியா
  • மத்திய ஆசிரியர் தகுதித் தேர்வு: பட்டதாரிகள் அக்.16 வரை விண்ணப்பிக்கலாம்

கோவையில் 32,326 பேர் பொங்கல் பரிசுத்தொகுப்பை பெறவில்லை

January 31, 2023 தண்டோரா குழு

கோவை மாவட்டத்தில் மொத்தம் 10 லட்சத்து 98 ஆயிரத்து 476 அரிசி குடும்ப அட்டைகள் உள்ளன. இதில் 32 ஆயிரத்து 326 பேர் பரிசுத்தொகுப்பை பெறவில்லை.

தமிழகம் முழுவதும் உள்ள ரேசன் கடைகளில் பொங்கல் பரிசு தொகை 1000 ரூபாய், 1 கிலோ பச்சரிசி, 1 கிலோ சர்க்கரை வழங்க முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் கடந்த மாதம் உத்தரவிட்டிருந்தார்.அதன்படி தகுதியுள்ள 2 கோடியே 18 லட்சத்து 86 ஆயிரத்து 123 குடும்ப அட்டைதாரர்களுக்கு ரூ.1000 பணம் ஒதுக்கப்பட்டு அந்த தொகை ரேசன் கடைகளுக்கு அனுப்பி வைக்கப்பட்டிருந்தது. ஆனால் இந்த பணத்தை பெரும்பாலான மக்கள் வாங்கினாலும் ஒருசிலர் இந்த பணம் வேண்டாம் என்று வாங்காமல் இருந்து விட்டனர்.

கோவை மாவட்டத்தில் மொத்தம் 10 லட்சத்து 98 ஆயிரத்து 476 அரிசி குடும்ப அட்டைகள் உள்ளன. இதில் 10 லட்சத்து 66 ஆயிரத்து 150 பேர் பொங்கல் பரிசு தொகுப்பை பெற்றுள்ளனர். இது 97.06 சதவீதம் ஆகும். 32 ஆயிரத்து 326 பேர் பரிசுத்தொகுப்பை பெறவில்லை. இதனால் இவர்களது பணம் அரசுக்கு திரும்பிச் சென்று விட்டது.

தமிழகம் முழுவதும் 4 லட்சத்து 39 ஆயிரத்து 669 குடும்ப அட்டைதாரர்கள் பொங்கல் பரிசு தொகை வாங்காததால் அரசுக்கு ரூ.43 கோடியே 96 லட்சத்து 69 ஆயிரம் பணம் திரும்பி வந்துவிட்டது. இந்த தொகையை அரசு கருவூலத்தில் அதிகாரிகள் செலுத்தி விட்டனர்.

மேலும் படிக்க