• Download mobile app
05 May 2024, SundayEdition - 3007
FLASH NEWS
  • வள்ளுவரைப் பற்றிய அடிப்படை புரிதல் ஆளுநருக்கு இல்லை: கனிமொழி
  • தெலங்கானா முதலமைச்சராக பதவியேற்றார் ரேவந்த் ரெட்டி;
  • தமிழகத்தில் இயல்பை விட இந்த ஆண்டு, வடகிழக்கு பருவமழை குறைவு –
  • மிக்ஜாம் புயல்: தமிழ்நாட்டுக்கு ரூ.450 கோடி நிதி ஒதுக்கீடு!
  • மத்தியில் ஆட்சிக்கு வந்ததும் சாதிவாரி கணக்கெடுப்பை நடத்துவோம்-ராகுல் காந்தி

அ.தி.மு.க.,வை வெட்ககேடாக நினைக்கிறேன் – பிரேமலதா விஜயகாந்த் பேச்சு

January 14, 2023 தண்டோரா குழு

கோவை கணபதியில் தே.மு.தி.க. சார்பில் நடைபெற்ற பொங்கல் விழாவில் தே.மு.தி.க. பொருளாளர் பிரேமலதா விஜயகாந்த் கலந்து கொண்டு பேசியதாவது:

நான் கிராமத்தில் இருந்து வந்து தான் தலைவர் மனைவியாக உங்கள் அண்ணியாக நிற்கிறேன். சின்ன கவுண்டர், வானத்தைப்போல படங்களில் கொங்கு மண்டலத்தை காட்டியது கேப்டன். 40 வருடம் மக்களுக்காக வாழ்ந்தவர் கேப்டன். மக்களை தங்கத்தட்டில் வைத்து தாலாட்டுவேன் என்றவர் கேப்டன். தே.மு.தி.க. நேர்மையான கட்சி, நல்லவர் ஆரம்பித்த கட்சி, என்றும் தவறான வழியில் தேமுதிக செல்லாது. அ.தி.மு.க.,வை வெட்ககேடாக நினைக்கிறேன்.

தமிழ்நாட்டில் எங்கும் பொங்கல் விழா அதிமுக கொண்டாடவில்லை. தமிழக அரசியல் வரலாற்றில் கவர்னர் முதன்முறையாக வெளிநடப்பு செய்த நிகழ்வு அது தலைகுனிவு நாளாக கருப்பு தினமாக பதியப்பட்டிருக்கிறது. கவர்னர் சாதித்துக் காட்டிருக்க வேண்டும். கவர்னருக்கு தே.மு.தி.க. கண்டனம்.

இவ்வாறு அவர் பேசினார்.

மேலும் படிக்க