• Download mobile app
24 May 2025, SaturdayEdition - 3391
FLASH NEWS
  • அமைச்சர் உதயநிதி துணை முதல்வராவதற்கு காத்திருக்கிறேன் – சபாநாயகர் அப்பாவு
  • தமிழ்நாட்டில் 11 இடங்களில் 100 டிகிரி ஃபாரன்ஹீட்க்கு மேல் வெயில் பதிவு!
  • “சந்திரபாபு நாயுடு கூறும் அனைத்துமே கட்டுக்கதைகள்” – ஜெகன் மோகன் ரெட்டி
  • மத்திய ஆசிரியர் தகுதித் தேர்வு: பட்டதாரிகள் அக்.16 வரை விண்ணப்பிக்கலாம்
  • பீகார் முன்னாள் துணை முதலமைச்சர் சுஷில் குமார் மோடி காலமானார்!
  • தமிழ்நாட்டில் +1 பொதுத்தேர்வு முடிவுகள் வெளியானது.. 91.17% பேர் தேர்ச்சி..!
  • வள்ளுவரைப் பற்றிய அடிப்படை புரிதல் ஆளுநருக்கு இல்லை: கனிமொழி
  • தெலங்கானா முதலமைச்சராக பதவியேற்றார் ரேவந்த் ரெட்டி;
  • தமிழகத்தில் இயல்பை விட இந்த ஆண்டு, வடகிழக்கு பருவமழை குறைவு –
  • மிக்ஜாம் புயல்: தமிழ்நாட்டுக்கு ரூ.450 கோடி நிதி ஒதுக்கீடு!
  • மத்தியில் ஆட்சிக்கு வந்ததும் சாதிவாரி கணக்கெடுப்பை நடத்துவோம்-ராகுல் காந்தி
  • அமைச்சர் உதயநிதி துணை முதல்வராவதற்கு காத்திருக்கிறேன் – சபாநாயகர் அப்பாவு

விமானத்தில் கொண்டுவரப்பட்ட ரூ.2 கோடி மதிப்பிலான 3.5 கிலோ தங்கம் பிடிபட்டது

January 14, 2023 தண்டோரா குழு

ஷார்ஜாவில் இருந்து கோவை வந்த விமானத்தில் கடத்தி வரப்பட்ட சுமார் 3.5 கிலோ தங்கம் பிடிபட்டது.

ஷார்ஜாவில் இருந்து கோவைக்கு இன்று வந்த ஏர் அரேபியா விமானத்தில் தங்கம் கடத்தி வரப்படுவதாக மத்திய வருவாய் புலனாய்வு இயக்குநரக அதிகாரிகளுக்கு ரகசிய தகவல் கிடைத்தது. அதன் அடிப்படையில் அந்த விமானத்தில் கோவை வந்து இறங்கிய பயணிகளை சோதனை செய்தனர். அப்போது அந்த பயணிகளில் 6 பேர் மீது சந்தேகம் எழுந்துள்ளது.

அவர்களிடம் நடத்திய சோதனையில் அவர்களின் பேன்ட் பாக்கெட், உடைகள் மற்றும் மலக்குடலில் மறைத்து வைக்கப்பட்டிருந்த சுமார் 3.5 கிலோ எடையுள்ள சுமார் ரூ. 2.05 கோடி மதிப்பிலான தங்கம் கைப்பற்றப்பட்டது. இதுகுறித்து கடலூரை சேர்ந்த மணிகண்டன் (32), திருச்சியை சேர்ந்த இப்ராஹிம் (20) ஆகிய இரண்டு பயணிகள் கைது செய்யப்பட்டனர்.

மேலும் படிக்க