• Download mobile app
08 Apr 2026, WednesdayEdition - 3710
FLASH NEWS
  • “மாணவர்கள் நடத்திய மொழிப்போரில் ஸ்டிக்கர் ஒட்டிக்கொண்டது திமுக”- பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ்
  • பிரவீன் சக்ரவர்த்தியின் கருத்து காங்கிரஸ் தலைமையின் கருத்து கிடையாது – கார்த்தி சிதம்பரம்
  • ராகுல்காந்தியின் போராட்டத்திற்கு தோள் நிற்போம் – முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்
  • “ஜெயலலிதா அவர்களே என் ரோல் மாடல்” -பிரேமலதா விஜயகாந்த் பேட்டி
  • ராகுல் காந்தி கைது – தவெக தலைவர் விஜய் கண்டனம்
  • செத்து சாம்பல் ஆனாலும் தனித்துதான் போட்டி – சீமான்
  • பாகிஸ்தானின் அணு ஆயுத மிரட்டலுக்கு அஞ்சமாட்டோம் – இந்தியா
  • மத்திய ஆசிரியர் தகுதித் தேர்வு: பட்டதாரிகள் அக்.16 வரை விண்ணப்பிக்கலாம்

விமானத்தில் கொண்டுவரப்பட்ட ரூ.2 கோடி மதிப்பிலான 3.5 கிலோ தங்கம் பிடிபட்டது

January 14, 2023 தண்டோரா குழு

ஷார்ஜாவில் இருந்து கோவை வந்த விமானத்தில் கடத்தி வரப்பட்ட சுமார் 3.5 கிலோ தங்கம் பிடிபட்டது.

ஷார்ஜாவில் இருந்து கோவைக்கு இன்று வந்த ஏர் அரேபியா விமானத்தில் தங்கம் கடத்தி வரப்படுவதாக மத்திய வருவாய் புலனாய்வு இயக்குநரக அதிகாரிகளுக்கு ரகசிய தகவல் கிடைத்தது. அதன் அடிப்படையில் அந்த விமானத்தில் கோவை வந்து இறங்கிய பயணிகளை சோதனை செய்தனர். அப்போது அந்த பயணிகளில் 6 பேர் மீது சந்தேகம் எழுந்துள்ளது.

அவர்களிடம் நடத்திய சோதனையில் அவர்களின் பேன்ட் பாக்கெட், உடைகள் மற்றும் மலக்குடலில் மறைத்து வைக்கப்பட்டிருந்த சுமார் 3.5 கிலோ எடையுள்ள சுமார் ரூ. 2.05 கோடி மதிப்பிலான தங்கம் கைப்பற்றப்பட்டது. இதுகுறித்து கடலூரை சேர்ந்த மணிகண்டன் (32), திருச்சியை சேர்ந்த இப்ராஹிம் (20) ஆகிய இரண்டு பயணிகள் கைது செய்யப்பட்டனர்.

மேலும் படிக்க