• Download mobile app
08 May 2024, WednesdayEdition - 3010
FLASH NEWS
  • வள்ளுவரைப் பற்றிய அடிப்படை புரிதல் ஆளுநருக்கு இல்லை: கனிமொழி
  • தெலங்கானா முதலமைச்சராக பதவியேற்றார் ரேவந்த் ரெட்டி;
  • தமிழகத்தில் இயல்பை விட இந்த ஆண்டு, வடகிழக்கு பருவமழை குறைவு –
  • மிக்ஜாம் புயல்: தமிழ்நாட்டுக்கு ரூ.450 கோடி நிதி ஒதுக்கீடு!
  • மத்தியில் ஆட்சிக்கு வந்ததும் சாதிவாரி கணக்கெடுப்பை நடத்துவோம்-ராகுல் காந்தி

கோவையில் சுட்டெரிக்கும் வெயிலில் பணி செய்யும் கர்ப்பிணி பெண்

January 12, 2023 தண்டோரா குழு

கோவையில் கர்ப்பிணி பெண் காவலர் சுட்டெரிக்கும் வெயிலில் பணி செய்யும் விடியோ காட்சிகள் சமூக வலைதளத்தில் வைரலாகி வருகிறது.

தமிழகம் முழுவதும் சாலைகளில் முக்கிய பிரமுகர்கள் வரும் போது பாதுகாப்பு பணியில் பெண் காவலர்கள் ஈடுபடுவதில் இருந்து விலக்கு அளிக்கப்பட்டது. அவ்வாறு சாலைகளில் பெண் காவலர்கள் சிரம்ப்படுவதால் இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.

இந்நிலையில் கோவை ஒண்டிப்புதூர் பகுதியில் கர்ப்பினி பெண் காவலர் ஒருவர் போக்குவரத்து சீர் செய்யும் பணிக்கு அனுப்பி வைக்கப்பட்டார். அவர் சுட்டெரிக்கும் வெயிலில் சாலையில் நின்று போக்குவரத்து சீர் செய்யும் விடியோ காட்சிகள் சமூக வலைதளத்தில் வைரலாகி வருகிறது. கர்ப்பினியாக இருக்கும் இந்த மாதிரியான பணிகளில் பெண் காவலர்களை அமர்த்த கூடாது என்ற கோரிக்கைகள் எழுந்துள்ளது.

மேலும் படிக்க