அரசுமுறைப் பயணமாக குஜராத் மாநிலம் சென்ற பிரதமர் நரேந்திர மோடி செவ்வாய்க்கிழமை (ஜனவரி 1௦) யோகாசனம் பயிற்சியைத் துறந்து, தனது தாயுடன் காலை உணவை உண்டு மகிழ்ந்தார்.
“ஆற்றல் மிக்க குஜராத்” என்னும் சர்வதேச மாநாட்டில் கலந்துகொள்ள நான்கு நாள் பயணமாக பிரதமர் நரேந்திர மோடி திங்கள்கிழமை (ஜனவரி 9) குஜராத் சென்றார்.
காலையில் யோகாசனம் செய்வதை முறையாகக் கொண்ட அவர், அதிகாலை தனது தாயாரைச் சந்தித்து அவருடன் சிற்றுண்டி மற்றும் தேநீர் அருந்தினார். இந்த மகிழ்ச்சி அனுபவத்தை தனது ட்விட்டர் பக்கத்தில் கூறியுள்ளார். அதில் “இன்று(செவ்வாய்க்கிழமை) யோகாசனத்தை துறந்து, என்னுடைய தாயாரைச் சந்தித்தேன். காலையில் அவரோடு உணவு உண்டு, நேரத்தைச் செலவிட்டேன்” என்று குறிப்பிட்டுள்ளார்.
கடந்த டிசம்பர் மாதம் பா.ஜ.க. மக்களவை கூட்ட சொற்பொழிவில் கலந்து கொள்ள குஜராத் வந்த பிரதமர் தனது தாயை 2௦ நிமிடங்கள் சந்தித்தார். மேலும் தனது 66வது பிறந்த நாளைக் கடந்த ஆண்டு செப்டம்பர் மாதம் தனது தாய் ஹீரா பென்னுடன் கொண்டாடி மகிழ்ந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.
கோவையில் ராயல்ஓக் ஃபர்னிச்சரின் இரண்டாவது புதிய புதிய ஸ்டோர் திறப்பு !
டிவிஎஸ் மோட்டார் நிறுவனம், ஊர் கேப்ஸ் இணைந்து தமிழ்நாட்டில் 500 மின்சார மூன்று சக்கர வாகனங்களை களமிறங்குகின்றன!
கோவை மாவட்டத்தில் மக்கள் குறைதீர்க்கும் முகாம் – 45 மனுக்கள் மீது சுமூகமான தீர்வு
கோவையில் அன்னையர் நினைவாக, தாய்மையை போற்றும் விதமாக தாய் – சேய் சிலை திறப்பு
தமிழ்நாட்டில் தனது மூன்று சக்கர மின்சார வாகனமான டிவிஎஸ் கிங் இவி மேக்ஸ் – டிவிஎஸ் மோட்டார் அறிமுகம்
கோவையில் தனிஷ்க் ஜுவல்லரியின் பிரம்மாண்ட காதணி கண்காட்சி திருவிழா துவக்கம்