• Download mobile app
14 May 2025, WednesdayEdition - 3381
FLASH NEWS
  • அமைச்சர் உதயநிதி துணை முதல்வராவதற்கு காத்திருக்கிறேன் – சபாநாயகர் அப்பாவு
  • தமிழ்நாட்டில் 11 இடங்களில் 100 டிகிரி ஃபாரன்ஹீட்க்கு மேல் வெயில் பதிவு!
  • “சந்திரபாபு நாயுடு கூறும் அனைத்துமே கட்டுக்கதைகள்” – ஜெகன் மோகன் ரெட்டி
  • மத்திய ஆசிரியர் தகுதித் தேர்வு: பட்டதாரிகள் அக்.16 வரை விண்ணப்பிக்கலாம்
  • பீகார் முன்னாள் துணை முதலமைச்சர் சுஷில் குமார் மோடி காலமானார்!
  • தமிழ்நாட்டில் +1 பொதுத்தேர்வு முடிவுகள் வெளியானது.. 91.17% பேர் தேர்ச்சி..!
  • வள்ளுவரைப் பற்றிய அடிப்படை புரிதல் ஆளுநருக்கு இல்லை: கனிமொழி
  • தெலங்கானா முதலமைச்சராக பதவியேற்றார் ரேவந்த் ரெட்டி;
  • தமிழகத்தில் இயல்பை விட இந்த ஆண்டு, வடகிழக்கு பருவமழை குறைவு –
  • மிக்ஜாம் புயல்: தமிழ்நாட்டுக்கு ரூ.450 கோடி நிதி ஒதுக்கீடு!
  • மத்தியில் ஆட்சிக்கு வந்ததும் சாதிவாரி கணக்கெடுப்பை நடத்துவோம்-ராகுல் காந்தி

கோவை விமான நிலையத்தில் இருந்து சார்ஜாவிற்கு சென்ற விமானத்தில் மோதிய கழுகுகள்

January 2, 2023 தண்டோரா குழு

கோவை விமான நிலையத்தில் இருந்து 22 விமானங்கள் தினந்தோறும் இயக்கப்படுகிறது. இதில் சர்வதேச அளவில் காலை ஏர் அரேபியா, மாலை சிங்கப்பூர் விமானம் என விமானங்கள் இயக்கப்படுகிறது.

இந்நிலையில் இன்று காலை வழக்கம் போல் ஏர் அரேபியா விமானம் கோவை விமான நிலையத்தில் இருந்து சார்ஜாவிற்க்கு 164 பயணிகளுடன் காலை 7மணிக்கு புறப்பட்டது.
அப்போது விமானம் புறப்பட்டு ஓடுபாதையில் சென்று கொண்டிருந்தபோது இரண்டு கழுகுகள் விமானத்தின் இடது பக்க எஞ்சின் மீது மோதியது. இதில் இரண்டு கழுகுகளில் ஒன்று என்ஜின் பிளேடில் அடிபட்டு இறந்தது.

இதனையடுத்து விமானம் நிறுத்தப்பட்டது. இதில் இருந்த பயணிகள் அனைவரையும் இறக்கிவிடப்பட்டனர்.மேலும் விமானத்தின் சேதங்கள் குறித்து பொறியாளர்கள் ஆய்வு செய்து வருவதாக விமான நிலைய அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.மேலும் சுமார் 4மணி நேரமாக விமானம் நிறுத்தி வைக்கப்பட்டுள்ளதால் பயணிகள் பெரும் அவதிக்கு உள்ளாகியுள்ளனர்.

மேலும் படிக்க