• Download mobile app
08 Apr 2026, WednesdayEdition - 3710
FLASH NEWS
  • “மாணவர்கள் நடத்திய மொழிப்போரில் ஸ்டிக்கர் ஒட்டிக்கொண்டது திமுக”- பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ்
  • பிரவீன் சக்ரவர்த்தியின் கருத்து காங்கிரஸ் தலைமையின் கருத்து கிடையாது – கார்த்தி சிதம்பரம்
  • ராகுல்காந்தியின் போராட்டத்திற்கு தோள் நிற்போம் – முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்
  • “ஜெயலலிதா அவர்களே என் ரோல் மாடல்” -பிரேமலதா விஜயகாந்த் பேட்டி
  • ராகுல் காந்தி கைது – தவெக தலைவர் விஜய் கண்டனம்
  • செத்து சாம்பல் ஆனாலும் தனித்துதான் போட்டி – சீமான்
  • பாகிஸ்தானின் அணு ஆயுத மிரட்டலுக்கு அஞ்சமாட்டோம் – இந்தியா
  • மத்திய ஆசிரியர் தகுதித் தேர்வு: பட்டதாரிகள் அக்.16 வரை விண்ணப்பிக்கலாம்

கோவையில் கொசு வலைகளால் தங்களை மூடி கொண்டு நூதன முறையில் மனு

January 2, 2023 தண்டோரா குழு

அரசாங்க இடத்தில் சாக்கடை கட்டுவதற்கு பள்ளிவாசல் நிர்வாகத்தினர் தடையாக இருப்பதாக கூறி பொதுமக்கள் கொசு வலைகளால் தங்களை மூடி கொண்டு மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் மனு அளித்துள்ளனர்.

சூலூர் வட்டாட்சியர் அலுவலகம் முன்பு உள்ள அரசாங்க இடத்தை பள்ளிவாசல் நிர்வாகத்தினர் ஆக்கிரமிப்பு செய்ய முயற்சிப்பதாக ஹிந்துஸ்தான் மக்கள் சேவா இயக்கத்தின் நிறுவனத் தலைவர் லோட்டஸ் மணிகண்டன் அப்பகுதி மக்களுடன் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் மனு அளித்துள்ளார்.

சூலூர் வட்டாட்சியர் அலுவலகம் முன்பு உள்ள காலி இடத்தில் தற்பொழுது கழிவுநீர் சாக்கடை வசதி செய்து தர பணிகள் தொடங்கப்பட்டுள்ள நிலையில் அந்த இடம் தங்களுக்கு சொந்தமானது என அங்கிருக்கும் பள்ளிவாசல் நிர்வாகத்தினர் கூறி வருவதாகவும், ஆனால் தகவல் அறியும் சட்டத்தின் கீழ் அந்த இடம் அரசாங்கத்திற்கு சொந்தமானது என தெரிய வந்துள்ளதாகவும் எனவே மாவட்ட நிர்வாகம் அந்த இடத்தில் சாக்கடை வசதிகள் செய்து தருமாறு கூறி இந்துஸ்தான் மக்கள் சேவா இயக்கத்தின் நிறுவன தலைவர் அப்பகுதி மக்களுடன் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் மனு அளித்தார்.

மனு அளிக்க வந்த அப்பகுதி மக்கள், நீண்ட நாட்களாக சாக்கடை வசதி இல்லாமல் கொசு, புழு பூச்சிகள் உள்ளிட்டவற்றால், அவதிப்பட்டு வந்த நிலையில் தற்போது பணிகள் துவங்க பட்டும் அதற்கு இடையூறு ஏற்படுவதாகவும் மாவட்ட ஆட்சியர் உடனடியாக இதில் கவனம் செலுத்தி சாக்கடை வசதி ஏற்படுத்தித் தருமாறு வலியுறுத்தி கொசு வலைகளால் தங்களை மூடி கொண்டு கோரிக்கை பதாகைகளை ஏந்தி நூதன முறையில் மனு அளித்தனர்.

மேலும் படிக்க