• Download mobile app
14 May 2025, WednesdayEdition - 3381
FLASH NEWS
  • அமைச்சர் உதயநிதி துணை முதல்வராவதற்கு காத்திருக்கிறேன் – சபாநாயகர் அப்பாவு
  • தமிழ்நாட்டில் 11 இடங்களில் 100 டிகிரி ஃபாரன்ஹீட்க்கு மேல் வெயில் பதிவு!
  • “சந்திரபாபு நாயுடு கூறும் அனைத்துமே கட்டுக்கதைகள்” – ஜெகன் மோகன் ரெட்டி
  • மத்திய ஆசிரியர் தகுதித் தேர்வு: பட்டதாரிகள் அக்.16 வரை விண்ணப்பிக்கலாம்
  • பீகார் முன்னாள் துணை முதலமைச்சர் சுஷில் குமார் மோடி காலமானார்!
  • தமிழ்நாட்டில் +1 பொதுத்தேர்வு முடிவுகள் வெளியானது.. 91.17% பேர் தேர்ச்சி..!
  • வள்ளுவரைப் பற்றிய அடிப்படை புரிதல் ஆளுநருக்கு இல்லை: கனிமொழி
  • தெலங்கானா முதலமைச்சராக பதவியேற்றார் ரேவந்த் ரெட்டி;
  • தமிழகத்தில் இயல்பை விட இந்த ஆண்டு, வடகிழக்கு பருவமழை குறைவு –
  • மிக்ஜாம் புயல்: தமிழ்நாட்டுக்கு ரூ.450 கோடி நிதி ஒதுக்கீடு!
  • மத்தியில் ஆட்சிக்கு வந்ததும் சாதிவாரி கணக்கெடுப்பை நடத்துவோம்-ராகுல் காந்தி

கோவை மாநகராட்சியின் ரூ. 3 கோடி மதிப்பிலான நிலம் மீட்பு

December 31, 2022 தண்டோரா குழு

கோவை மாநகராட்சியில் உள்ள பல்வேறு வார்டுகளில் மாநகராட்சிக்கு சொந்தமான இடங்கள் சில தனி நபர்களால் ஆக்கிரமிப்பு செய்யப்பட்டு அதில் தற்காலிக செட் அமைப்பது போன்ற பல்வேறு செயல்களை செய்து வருகின்றனர்.

இந்நிலையில் கோவை மாநகராட்சி 90 வது வார்டு கோவை புதூர் சரவணா நகர் பகுதியில் மாநகராட்சிக்கு சொந்தமான முப்பது செண்ட் இடத்தை சில தனி நபர்கள் அபகரித்து அதனை விற்பனை செய்யவும் முயன்றுள்ளனர். இந்நிலையில்,அதே பகுதியில் வசிக்கும் சமூக ஆர்வலர் சீனிவாசன் என்பவர் இது குறித்து புகார் அளித்திருந்தார். இந்த புகாரின் அடிப்படையில் மாநகராட்சி கமிஷன்அர் பிரதாப் உத்தரவின் படி மாநகராட்சி தெற்கு மண்டல அதிகாரிகள் நேரில் ஆய்வு மேற்கொண்டு மாநகராட்சி க்கு சொந்தமான மூன்று கோடி ரூபாய் மதிப்புள்ள இடத்தை மீட்டனர்.

இதனை தொடர்ந்து மீட்கப்பட்ட இடத்தில் இது மாநகராட்சிக்கு சொந்தமான இடம் என அறிவிப்பு பலகையும் வைக்கப்பட்டது. இது குறித்து அந்த பகுதி மக்கள் கூறுகையில், நீண்ட நாட்களாக தனிநபர் ஆக்ரமிப்பில் இருந்த இந்த இடத்தை தற்போது மாநகராட்சி மீட்டுள்ளதால் இந்த பகுதியில் பூங்கா அமைத்தால் மிகவும் மகிழ்ச்சியாக இருக்கும் என தெரிவித்தனர்.

மேலும் படிக்க