• Download mobile app
19 May 2024, SundayEdition - 3021
FLASH NEWS
  • பீகார் முன்னாள் துணை முதலமைச்சர் சுஷில் குமார் மோடி காலமானார்!
  • தமிழ்நாட்டில் +1 பொதுத்தேர்வு முடிவுகள் வெளியானது.. 91.17% பேர் தேர்ச்சி..!
  • வள்ளுவரைப் பற்றிய அடிப்படை புரிதல் ஆளுநருக்கு இல்லை: கனிமொழி
  • தெலங்கானா முதலமைச்சராக பதவியேற்றார் ரேவந்த் ரெட்டி;
  • தமிழகத்தில் இயல்பை விட இந்த ஆண்டு, வடகிழக்கு பருவமழை குறைவு –
  • மிக்ஜாம் புயல்: தமிழ்நாட்டுக்கு ரூ.450 கோடி நிதி ஒதுக்கீடு!
  • மத்தியில் ஆட்சிக்கு வந்ததும் சாதிவாரி கணக்கெடுப்பை நடத்துவோம்-ராகுல் காந்தி

கோவையில் நடைபெற்ற ஓய்வூதியம் சொத்துரிமை எனும் ஓய்வூதியர் தின விழா

December 21, 2022 தண்டோரா குழு

தமிழ்நாடு ஓய்வு பெற்ற அரசு ஊழியர் சங்கத்தின் சார்பாக கோவையில் ஓய்வூதியம் சொத்துரிமை எனும் ஓய்வூதியர் தின விழா நடைபெற்றது.

தமிழ்நாடு ஓய்வு பெற்ற அரசு ஊழியர் சங்கத்தின் கோவை மாவட்டம் சார்பாக ஓய்வூதியர் தின விழா வடகோவை மாநகராட்சி ராமலிங்க மண்டப அரங்கில் நடைபெற்றது. மாவட்ட தலைவர் பலராமன் தலைமையில் நடைபெற்ற இதில்,துணை தலைவர் ராமசுந்தரம் அனைவரையும் வரவேற்று பேசினார்.

சிறப்பு அழைப்பாளராக,மாநில தலைவர் கங்காதரன் விழாவை துவக்கி வைத்து சிறப்புரையாற்றினார். முன்னதாக செய்தியாளர்களிடம் பேசிய மாவட்ட தலைவர் பலராமன்,தற்போதையை அரசு தேர்தல் அறிக்கையில் உறுதியளிக்கப்பட்ட படி புதிய பென்ஷன் திட்டத்தை கைவிட்டு பழைய ஓய்வூதிய திட்டத்தை அமல்படுத்த வேண்டும் மத்திய அரசு வழங்கியது போல் அகவிலை இப்படியை உரிய தேதியில் மாநில அரசு ஓய்வூதியர்களுக்கு உடனடியாக வழங்க வேண்டும் உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை முன் வைத்து பேசினார்.

விழாவில் உயிரின் சுவாசம் அறக்கட்டளை நிறுவனரும்,ராயல் கேர் மருத்துவமனை தலைவருமான மருத்துவர் மாதேஸ்வரன், சமூக கொடையாளர் ஓய்வு பெற்ற அலுவலர் கிருஷ்ணன்,ஆகியோருக்கு விருது வழங்கி கவுரவிக்கப்பட்டது. நிகழ்ச்சியில் சங்க நிர்வாகிகள் முகமது சிங்காரவேலு வேலுச்சாமி உட்பட பலர் கலந்து கொண்டனர்.

மேலும் படிக்க