• Download mobile app
08 Apr 2026, WednesdayEdition - 3710
FLASH NEWS
  • “மாணவர்கள் நடத்திய மொழிப்போரில் ஸ்டிக்கர் ஒட்டிக்கொண்டது திமுக”- பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ்
  • பிரவீன் சக்ரவர்த்தியின் கருத்து காங்கிரஸ் தலைமையின் கருத்து கிடையாது – கார்த்தி சிதம்பரம்
  • ராகுல்காந்தியின் போராட்டத்திற்கு தோள் நிற்போம் – முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்
  • “ஜெயலலிதா அவர்களே என் ரோல் மாடல்” -பிரேமலதா விஜயகாந்த் பேட்டி
  • ராகுல் காந்தி கைது – தவெக தலைவர் விஜய் கண்டனம்
  • செத்து சாம்பல் ஆனாலும் தனித்துதான் போட்டி – சீமான்
  • பாகிஸ்தானின் அணு ஆயுத மிரட்டலுக்கு அஞ்சமாட்டோம் – இந்தியா
  • மத்திய ஆசிரியர் தகுதித் தேர்வு: பட்டதாரிகள் அக்.16 வரை விண்ணப்பிக்கலாம்

பேக்கரிகளில் இருந்து 5 குழந்தை தொழிலாளர்கள் மீட்பு

December 16, 2022 தண்டோரா குழு

பேக்கரி மற்றும் அலங்கார பொருட்கள் விற்கும் நிறுவனங்களில் குழந்தை
மற்றும் வளரிளம் பருவத்தினர் பணியமர்த்தப்பட்டிருப்பது தொடர்பாக மாவட்ட தடுப்பு படையினர், ஆள் கடத்தல் தடுப்பு பிரிவு, காவல் துறையினர், தேசிய குழந்தை தொழிலாளர் திட்டம், தொழிலக பாதுகாப்பு மற்றும் சுகாதார இயக்ககம், சைல்டு லைன் அமைப்பு மற்றும் தொழிலாளர் துணை ஆய்வர்கள் மற்றும் தொழிலாளர் உதவி ஆய்வர்களால் பொள்ளாச்சி மற்றும் கோவை ரயில் நிலையம் பகுதி, ஆர்,எஸ்.புரம்,
ராஜ வீதி, தாமஸ்வீதி, ரங்கே கவுணடர் வீதிகளில் உள்ள 68 நிறுவனங்களில் சிறப்பாய்வுகள் மேற்கொண்டனர்.

ஆய்வின் போது 5 குழந்தை தொழிலாளர்கள் மீட்கப்பட்டனர். மீட்கப்பட்ட வளரிளம் பருவத் தொழிலாளர்களை குழந்தைகள் நலக்குழுவிடம் ஒப்படைக்கப்பட்டனர்.

மேலும் படிக்க