• Download mobile app
08 Apr 2026, WednesdayEdition - 3710
FLASH NEWS
  • “மாணவர்கள் நடத்திய மொழிப்போரில் ஸ்டிக்கர் ஒட்டிக்கொண்டது திமுக”- பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ்
  • பிரவீன் சக்ரவர்த்தியின் கருத்து காங்கிரஸ் தலைமையின் கருத்து கிடையாது – கார்த்தி சிதம்பரம்
  • ராகுல்காந்தியின் போராட்டத்திற்கு தோள் நிற்போம் – முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்
  • “ஜெயலலிதா அவர்களே என் ரோல் மாடல்” -பிரேமலதா விஜயகாந்த் பேட்டி
  • ராகுல் காந்தி கைது – தவெக தலைவர் விஜய் கண்டனம்
  • செத்து சாம்பல் ஆனாலும் தனித்துதான் போட்டி – சீமான்
  • பாகிஸ்தானின் அணு ஆயுத மிரட்டலுக்கு அஞ்சமாட்டோம் – இந்தியா
  • மத்திய ஆசிரியர் தகுதித் தேர்வு: பட்டதாரிகள் அக்.16 வரை விண்ணப்பிக்கலாம்

ஸ்வச்சதா மிஷன் பிரச்சாரத்தின் ஒரு பகுதியாக தூய்மைப் பணி

December 8, 2022 தண்டோரா குழு

மாணவர்களிடையே விழிப்புணர்வை ஏற்படுத்தவும், சுற்றுப்புறத்தை தூய்மையாக/பிளாஸ்டிக் இல்லாத பழக்கத்தை ஏற்படுத்தவும், சாலையோரங்களில் கொட்டப்படும் பிளாஸ்டிக் கழிவுகள்/குப்பைகளின் அச்சுறுத்தலைப் புரிந்துகொள்ளவும், ஸ்வச்சதா மிஷன் பிரச்சாரத்தின் ஒரு பகுதியாக, தூய்மைப் பணி 03 டிசம்பர் 2022 அன்று அண்ணாபுரம் சாலையில் சம்ஹிதா அகாடமியின் ஊழியர்கள் மற்றும் மாணவர்களால் இயக்கப்பட்டது.

நிகழ்ச்சியை சம்ஹிதா அகாடமி முதல்வர் கொடியசைத்து துவக்கி வைத்தார். ஊராட்சி செயலர் சதீஷ் தலைமையில் மலுமிச்சம்பட்டி ஊராட்சியைச் சேர்ந்த 5 பேர் உட்பட 67 மாணவர்கள், 48 பணியாளர்கள் மற்றும் 8 பொதுமக்கள் இந்நிகழ்ச்சியில் கலந்து கொண்டனர். சாலையின் இருபுறமும் கொட்டப்படும் குப்பைகளை, மாணவர்கள்/ஊழியர்கள் எடுத்து, அதை அகற்ற மலுமிச்சம்பட்டி ஊராட்சி வழங்கிய வாகனங்களில் ஏற்றினர்.

இந்நிகழ்ச்சியில் மாணவர்கள் மற்றும் பணியாளர்கள் ஆர்வத்துடன் கலந்து கொண்டனர். இது நமது சுற்றுப்புறத்தை தூய்மையாக வைத்திருக்க வேண்டியதன் அவசியத்தை பற்றி அறிந்து கொள்ள மாணவர்களுக்கு ஒரு உத்வேகமாகவும், சுற்றுப்புற பகுதி பொதுமக்களுக்கு அந்த பகுதியை எப்போதும் தூய்மையாக/பிளாஸ்டிக் இல்லாமல் வைத்திருக்க வேண்டும் என்ற செய்தியாகவும் அமைந்தது, நிறைவுரையின் போது, ஊராட்சி செயலர் சதீஷ், பள்ளி மாணவர்களை ஊக்குவிப்பதற்காக மாணவர்களை பாராட்டி அவர்கள் கல்வி கற்பதனோடு கூட இது போன்ற அவசர கால செயல்களிலும் தொடர்ந்து ஈடுபட ஊக்குவித்தார்.

மேலும் படிக்க