சிங்காநல்லூர் முதல் ஹோப் காலேஜ் வரை உள்ள காமராஜர் சாலையை, நான்கு வழிச்சாலையாக மாற்ற வேண்டும் என கோரிக்கை எழுந்துள்ளது.
இதுகுறித்து, கோவை கன்ஸ்யூமர் வாய்ஸ் நுகர்வோர் அமைப்பின் செயலர் லோகு சென்னையில் உள்ள நெடுஞ்சாலைத்துறை தலைமைப் பொறியாளருக்கு அனுப்பியுள்ள கடிதத்தில் கூறியிருப்பதாவது:
கோவை நெடுஞ்சாலை தெற்கு உபகோட்டம், சிங்காநல்லூர் – ஹோப்காலேஜ் வரை செல்லும் காமராஜர் சாலையில் தற்போது, காலை முதல் இரவு வரை எந்நேரமும் கார், இருசக்கர வாகனங்கள், பேருந்துகள் உள்ளிட்ட ஆயிரக்கணக்கான வாகனங்கள் தினமும் சென்று வருகின்றன.மேலும், ஹோப்காலேஜ் சிக்னலில் இருந்து, மசக்காளிபாளையம் வரையில் உள்ள சாலையில் இருந்து காமராஜர் சாலைக்கு செல்ல ஏராளமான குறுக்குச் சாலைகள் உள்ளன.
அதுதவிர, சிங்காநல்லூர் பேருந்து நிலையம் உள்ளதால், இங்கிருந்து மதுரை, திருச்சி செல்லும் ஆம்னி பேருந்துகளால் அதிகளவில் போக்குவரத்து நெரிசல் ஏற்படுகிறது. குறிப்பாக, பண்டிகை நாள்களில் சிங்காநல்லூர் பேருந்து நிலையத்தில் இருந்து ஹோப் காலேஜ் வரை சாலையில் ஆம்னிப் பேருந்துகள் அணிவகுத்து நிற்கும். இதனால், அப்பகுதியில் வாகனங்கள் தேக்கம் தவிர்க்க முடியாமல் உள்ளது.
மணீஸ் திரையரங்கம், ராமானுஜ நகர், இஎஸ்ஐ மருத்துவமனை உள்ளிட்ட நெரிசல் மிகுந்த இடங்களில் சாலை குறுகலாக உள்ளதாலும், அவ்வழியாக அதிவேகத்தில் செல்லும் வாகனங்களாலும், அப்பகுதியில் விபத்துகள் அடிக்கடி நடக்கின்றன. எனவே, போக்குவரத்து நெரிசல், வாகன எண்ணிக்கை அதிகரிப்பு ஆகியவற்றை கருத்தில் கொண்டு, சிங்காநல்லூர் முதல் ஹோப் காலேஜ் வரை உள்ள காமராஜர் சாலையை நான்கு வழிச்சாலையாக மாற்றிட நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும்.
இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.
கோவை மாவட்டத்தில் மக்கள் குறைதீர்க்கும் முகாம் – 45 மனுக்கள் மீது சுமூகமான தீர்வு
கோவையில் அன்னையர் நினைவாக, தாய்மையை போற்றும் விதமாக தாய் – சேய் சிலை திறப்பு
தமிழ்நாட்டில் தனது மூன்று சக்கர மின்சார வாகனமான டிவிஎஸ் கிங் இவி மேக்ஸ் – டிவிஎஸ் மோட்டார் அறிமுகம்
கோவையில் தனிஷ்க் ஜுவல்லரியின் பிரம்மாண்ட காதணி கண்காட்சி திருவிழா துவக்கம்
கோவையில் ஜூன் 10ல் 1008 திருவிளக்கு திருவிழா – 51 மகளிருக்கு “மகாசக்தி” விருது
ஈஷா மண் காப்போம் இயக்கத்தின் தன்னார்வலருக்கு ஐநா-வில் பொறுப்பு