• Download mobile app
16 Nov 2025, SundayEdition - 3567
FLASH NEWS
  • ராகுல்காந்தியின் போராட்டத்திற்கு தோள் நிற்போம் – முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்
  • “ஜெயலலிதா அவர்களே என் ரோல் மாடல்” -பிரேமலதா விஜயகாந்த் பேட்டி
  • ராகுல் காந்தி கைது – தவெக தலைவர் விஜய் கண்டனம்
  • செத்து சாம்பல் ஆனாலும் தனித்துதான் போட்டி – சீமான்
  • பாகிஸ்தானின் அணு ஆயுத மிரட்டலுக்கு அஞ்சமாட்டோம் – இந்தியா
  • மத்திய ஆசிரியர் தகுதித் தேர்வு: பட்டதாரிகள் அக்.16 வரை விண்ணப்பிக்கலாம்

விதைகள் உற்பத்தி மூலம் இருமடங்கு வருமானம் ஈட்டலாம் வேளாண்மைத் துறை அதிகாரி தகவல்

November 9, 2022 தண்டோரா குழு

கோவையில் விதைப் பண்ணை திட்டத்தின் கீழ் விதைகள் உற்பத்தி செய்து வழங்குவதன் மூலம் இருமடங்கு வருமானம் ஈட்டலாம் என வேளாண்மைத் துறை இணை இயக்குநர் தெரிவித்துள்ளார்.

இதுகுறித்து வேளாண்மைத் துறை இணை இயக்குநர் ஷபி அகமது கூறியிருப்பதாவது:

கோவை மாவட்டத்தில் விதை மேம்பாட்டு முகமை திட்டத்தின் கீழ் நெல், சோளம், பயறுவகை பயிர்கள், நிலக்கடலை, எள் உள்ளிட்ட பயிர்களில் சான்று மற்றும் ஆதார நிலை விதைகள் உற்பத்தி செய்வதற்கு விதைப்பண்ணை அமைக்கப்பட்டு வருகிறது. விதைப் பண்ணை அமைத்து விவசாயிகள் உற்பத்தி செய்யப்படும் சான்று மற்றும் ஆதார விதைகள் வேளாண்மைத் துறை சார்பில் நேரடியாக விவசாயிகளிடம் இருந்து கொள்முதல் செய்யப்படுகிறது.

இதற்கு இருடமங்கு வரை விலை கிடைக்கிறது. தானியங்கள் உற்பத்தியை காட்டிலும் விதைகள் உற்பத்தி மூலம் விவசாயிகளுக்கு இரட்டிப்பு வருமானம் கிடைக்கிறது. எனவே விருப்பமுள்ள விவசாயிகள் அந்தந்த வட்டார வேளாண்மை விரிவாக்க மையத்தை தொடர்புகொண்டு விதைப் பண்ணை அமைத்து பயன் பெறலாம். இவ்வாறு அவர் கூறினார்.

மேலும் படிக்க