• Download mobile app
02 Jun 2026, TuesdayEdition - 3765
FLASH NEWS
  • எங்களை நீக்குவதற்கு இபிஎஸ்க்கு அதிகாரம் இல்லை.. – சி. வி.சண்முகம்
  • எஸ்.பி.வேலுமணி, சி.வி.சண்முகம் உள்ளிட்ட MLA-க்கள் பதவி பறிப்பு
  • ”நீட் தேர்வை முழுமையாக ரத்து செய்ய வேண்டும்”- முதல்வர் விஜய்
  • “மாணவர்கள் நடத்திய மொழிப்போரில் ஸ்டிக்கர் ஒட்டிக்கொண்டது திமுக”- பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ்
  • பிரவீன் சக்ரவர்த்தியின் கருத்து காங்கிரஸ் தலைமையின் கருத்து கிடையாது – கார்த்தி சிதம்பரம்
  • “ஜெயலலிதா அவர்களே என் ரோல் மாடல்” -பிரேமலதா விஜயகாந்த் பேட்டி
  • ராகுல் காந்தி கைது – தவெக தலைவர் விஜய் கண்டனம்
  • செத்து சாம்பல் ஆனாலும் தனித்துதான் போட்டி – சீமான்
  • பாகிஸ்தானின் அணு ஆயுத மிரட்டலுக்கு அஞ்சமாட்டோம் – இந்தியா
  • மத்திய ஆசிரியர் தகுதித் தேர்வு: பட்டதாரிகள் அக்.16 வரை விண்ணப்பிக்கலாம்

கோவை மாவட்ட வங்கிகளின் வருடாந்திர கடன் திட்ட புத்தகம் வெளியீடு – ரூ.27,700 கோடி கடன் வழங்க இலக்கு

October 30, 2022 தண்டோரா குழு

கோவை மாவட்ட வங்கிகளின் வருடாந்திர கடன் திட்ட புத்தகம் வெளியீட்டு விழா நேற்று நடந்தது. இதில், ரூ.27 ஆயிரத்து 700 கோடி கடன் வழங்க இலக்கு நிர்ணயிக்கப்பட்டுள்ளது.

கோவை மாவட்ட கலெக்டர் அலுவலகத்தில் 2022-23ம் ஆண்டிற்கான கோவை மாவட்ட வங்கிகளின் வருடாந்திர கடன் திட்ட புத்தகத்தை கலெக்டர் சமீரன் வெளியிட்டார். இப்புத்தகத்தின் முதல் பிரதியை கனரா வங்கி உதவி பொது மேலாளர்பாபு, ரிசர்வ் வங்கி உதவி பொது மேலாளர் அமிர்தவள்ளி ஆகியோர் பெற்றுக் கொண்டனர்.

இதுகுறித்து கலெக்டர் சமீரன் கூறுகையில்,

“ஒவ்வொரு ஆண்டும் நபார்டு வங்கி ஒவ்வொரு மாவட்டத்திற்கும் வளம் சார்ந்த வங்கி கடன் திட்டத்தை தயாரித்து வெளியிடுகிறது. அதன் அடிப்படையில், தமிழகத்திலேயே மிகவும் அதிகபட்சமாக ரூ.27 ஆயிரத்து 700 கோடிக்கு கோவை மாவட்டத்தில் உள்ள வங்கிகளின் மூலம் கடன் வழங்க இலக்கு நிர்ணயிக்கப்பட்டுள்ளது.

இந்த ஆண்டிற்கான வருடாந்திர கடன் திட்டமானது நபார்டு வங்கியின் உத்தேச கடன் இலக்கை ஆதாரமாக கொண்டு தயாரிக்கப்பட்டுள்ளது. கடன் திட்டத்தில் விவசாயத்திற்கு ரூ.12 ஆயிரம் கோடியும், சிறு குறு நடுத்தர தொழில் மையத்திற்கு ரூ.14 ஆயிரத்து 500 கோடியும் இன்னும் பிற முன்னுரிமை கடன்களுக்கு ரூ.1200 கோடி என மொத்தம் ரூ.27 ஆயிரத்து 700 கோடி கடன் வழங்க இலக்கு நிர்ணயிக்கப்பட்டுள்ளது. இது கடந்த ஆண்டை விட ரூ.4987.25 கோடி அதிகம் என்பது குறிப்பிடதக்கது.

இவ்வாறு சமீரன் கூறினார்.

இதைத்தொடர்ந்து கனரா வங்கியின் ஊரக சுய வேலைவாய்ப்பு பயிற்சி நிறுவனத்தில் பயிற்சி பெற்று சுயதொழில் செய்து முன்னேறிய 4 மகளிருக்கு கலெக்டர் சமீரன் விருதுகளை வழங்கினார்.இந்நிகழ்ச்சியில் திட்ட இயக்குநர் (மகளிர் திட்டம்) சந்திரா, மாவட்ட முன்னோடி வங்கி மேலாளர் கவுசல்யா தேவி, தாட்கோ பொது மேலாளர் செல்வன் மற்றும் அரசு அலுவலர்கள் பலர் கலந்து கொண்டனர்.

மேலும் படிக்க