• Download mobile app
04 Apr 2026, SaturdayEdition - 3706
FLASH NEWS
  • “மாணவர்கள் நடத்திய மொழிப்போரில் ஸ்டிக்கர் ஒட்டிக்கொண்டது திமுக”- பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ்
  • பிரவீன் சக்ரவர்த்தியின் கருத்து காங்கிரஸ் தலைமையின் கருத்து கிடையாது – கார்த்தி சிதம்பரம்
  • ராகுல்காந்தியின் போராட்டத்திற்கு தோள் நிற்போம் – முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்
  • “ஜெயலலிதா அவர்களே என் ரோல் மாடல்” -பிரேமலதா விஜயகாந்த் பேட்டி
  • ராகுல் காந்தி கைது – தவெக தலைவர் விஜய் கண்டனம்
  • செத்து சாம்பல் ஆனாலும் தனித்துதான் போட்டி – சீமான்
  • பாகிஸ்தானின் அணு ஆயுத மிரட்டலுக்கு அஞ்சமாட்டோம் – இந்தியா
  • மத்திய ஆசிரியர் தகுதித் தேர்வு: பட்டதாரிகள் அக்.16 வரை விண்ணப்பிக்கலாம்

கழிப்பிடம் இல்லாத வீடுகளுக்கு கழிப்பிடங்கள் கட்டித்தரப்படும் மாநகராட்சி கமிஷனர் அறிவிப்பு

October 30, 2022 தண்டோரா குழு

கோவை மாநகராட்சி தூய்மை பாரத இயக்கம் சார்பில் தனிநபர் கழிப்பிடம் இல்லாத வீடுகளுக்கு பொது மக்களிடம் விண்ணப்பங்கள் பெறப்பட்டு கழிப்பிடங்கள் கட்டித்தரப்படும் என மாநகராட்சி கமிஷனர் பிரதாப் தெரிவித்துள்ளார்.

இதுகுறித்து அவர் கூறுகையில்

`கோவை மாநகராட்சிக்குட்பட்ட பகுதிகளில் ஒன்றிய மற்றும் மாநில அரசின் நிதியின் மூலம் தனிநபர் கழிப்பிடம் இல்லாத வீடுகளுக்கு தூய்மை பாரத திட்டத்தின்கீழ் கழிப்பிடம் கட்டித்தருவதற்கு விண்ணப்பங்கள் வரவேற்றப்படுகிறது. இதற்கென ஒன்றிய அரசின் மான்யமாக ரூ.4000-மும், மாநில அரசின் மான்யமாக ரூ.2667-மும் மற்றும் நகராட்சி பங்குத் தொகை ரூ.2667 ஆக நிதி பங்கீடு செய்யப்பட்டுள்ளது. பொதுமக்கள் தங்கள் விண்ணப்பங்களை அந்தந்த மண்டலங்களில் உள்ள சுகாதார ஆய்வாளர் அலுவலகங்களில் சமர்ப்பிக்கலாம்” என்றார்.

மேலும் படிக்க