• Download mobile app
02 Jun 2026, TuesdayEdition - 3765
FLASH NEWS
  • எங்களை நீக்குவதற்கு இபிஎஸ்க்கு அதிகாரம் இல்லை.. – சி. வி.சண்முகம்
  • எஸ்.பி.வேலுமணி, சி.வி.சண்முகம் உள்ளிட்ட MLA-க்கள் பதவி பறிப்பு
  • ”நீட் தேர்வை முழுமையாக ரத்து செய்ய வேண்டும்”- முதல்வர் விஜய்
  • “மாணவர்கள் நடத்திய மொழிப்போரில் ஸ்டிக்கர் ஒட்டிக்கொண்டது திமுக”- பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ்
  • பிரவீன் சக்ரவர்த்தியின் கருத்து காங்கிரஸ் தலைமையின் கருத்து கிடையாது – கார்த்தி சிதம்பரம்
  • “ஜெயலலிதா அவர்களே என் ரோல் மாடல்” -பிரேமலதா விஜயகாந்த் பேட்டி
  • ராகுல் காந்தி கைது – தவெக தலைவர் விஜய் கண்டனம்
  • செத்து சாம்பல் ஆனாலும் தனித்துதான் போட்டி – சீமான்
  • பாகிஸ்தானின் அணு ஆயுத மிரட்டலுக்கு அஞ்சமாட்டோம் – இந்தியா
  • மத்திய ஆசிரியர் தகுதித் தேர்வு: பட்டதாரிகள் அக்.16 வரை விண்ணப்பிக்கலாம்

கவன ஈர்ப்பு ஆர்ப்பாட்டத்தில் இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் சார்பில் 300க்கும் மேற்பட்டவர்கள் பங்கேற்க முடிவு

October 14, 2022 தண்டோரா குழு

இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் கோவை மாநகர், மேற்கு மண்டலம், மத்திய மண்டலம், கிழக்கு மண்டலம், வடக்கு மண்டலம், தொண்டாமுத்தூர், மதுக்கரை,பெரியநாயக்கன்பாளையம், சூலூர், தெற்கு கமிட்டியின் நிர்வாகிகள், மாவட்ட குழு உறுப்பினர்கள் கூட்டம் ஜீவா இல்லத்தில் கட்சியின் நிர்வாக குழு உறுப்பினர் செல்வராஜ் தலைமையில் நடைபெற்றது.

இக்கூட்டத்தில் எடுக்கப்பட்ட முடிவுகள் பின்வருமாறு:

கோவை மேற்கு தொடர்ச்சி மலை பகுதிகளை பல்வேறு கார்ப்பரேட் நிறுவனங்கள் ஆக்கிரமித்து வன விலங்குகளின் வாழ்வாதாரத்தை பறித்துள்ளன. இயற்கை சூழலை அளித்துள்ளன. பெரும் ஆக்கிரமிப்பு செய்ததை கண்டித்தும், ஆக்கிரமிப்பு செய்யப்பட்ட அனைத்து இடங்களையும் அரசு கையகப்படுத்தி வனங்களை பாதுகாக்க வேண்டும் என்ற கோரிக்கை முன்வைத்து இந்திய கம்யூனிஸ்ட் கட்சி, மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி, விடுதலை சிறுத்தை, தந்தை பெரியார் திராவிட இயக்கம் உள்ளிட்ட 12 அமைப்புகள் நடத்துகின்ற அரசின் கவன ஈர்ப்பு ஆர்ப்பாட்டம் வரும் 16ம் தேதி (நாளை) ஆலாந்துறையில் காலை 10 மணி அளவில் நடைபெற உள்ளது.

இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் சார்பில் 300க்கும் மேற்பட்டவர்கள் பங்கேற்க செய்வதென முடிவு செய்யப்பட்டது.

மேலும் படிக்க